சிக்கன் வாங்கலாம் என்று கடைக்கு போனால்.. ரேட்டை கேட்டு ஆடிப்போன பெங்களூர்வாசிகள்! விண்ணை தொடும் விலை
பெங்களூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ வாசிகள் பலரும் இறைச்சி கடைக்கு படையெடுத்துள்ளனர். இதில் சிக்கன் வாங்க வேண்டும் என்று நினைத்த வாடிக்கையாளர்கள் பலரும் சிக்கன் விலையை கேட்டு ஷாக் ஆகியுள்ளனர். அந்த அளவுக்கு பெங்களூரில் ஒரு கிலோ சிக்கன் 300 முதல் 350 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் சிக்கன் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெங்களூர் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு கிலோ சிக்கன் 300 ரூபாயை தாண்டி விற்பனையாவதால், இன்று கடைக்கு சென்ற வாடிக்கையாளளர்கள் விலையை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கிலோ சிக்கன் 150 முதல் 180 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், சமீப நாட்களாக தொடர்ந்து ரூ.200 முதல் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.

சிக்கன் விலை உயர்வு: ஆனால் இன்று திடீரென்று 300 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டதால் சிக்கன் வாங்க கடைக்கு வந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் சிக்கன் எடுத்து சாப்பிடும் பழக்கம் அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் மத்தியில் உள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமையான இன்று சிக்கன் வாங்க கடைகளுக்கு சென்ற வாடிக்கையாளர்கள் விலையை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.
350 ரூபாய் வரை விற்பனை: கோழிகளுக்கான தீவன விலை உயர்வு காரணமாக சிக்கன் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து இருப்பதாகவும், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் சிக்கன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தோல் உரிக்கப்பட்ட சிக்கன் ஒரு கிலோ ரூ.220 - 280 வரை விற்பனையானது. ஆனால், தற்போது விலை அப்படியே கிடுகிடுவென உயரந்து ரூ. 300 முதல் 350 வரைக்கு விற்பனையாகிறது.
திடீர் உயர்வுக்கு என்ன காரணம்?: பிராய்லர் கோழி விலை ரூ.280 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் இந்த கோழியின் விலை ரூ.200 - 220 வரை விற்பனையானது. சிக்கன் விலை இப்படி திடீரென உயர்ந்தது குறித்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில், "அதீத வெப்பம் காரணமாக கோழிகள் அதிகம் உயிரிழக்கின்றன. விலை உயர்வுக்கு இதுவே முக்கிய காரணமாகும்” என்றனர்.
சிக்கன் விலை கிடுகிடுவென உயர்ந்ததற்கான காரணம் குறித்து கோழிப்பண்ணை உரிமையாளர் எஸ் ஆர்கே குமாரசாமி கூறுகையில், "பெங்களூரில் நிலவிய கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் 30 சதவிகித கோழிகள் உயிரிழந்து விட்டன. வழக்கமாக கோழிகள் 45 நாட்கள் கழித்து 2 கிலோ எடைக்கு வந்துவிடும். ஆனால், இந்த ஆண்டு நிலவிய வெப்பத்தால் கோழிகள் தீவனத்தை கூட சாப்பிட முடியாமல் சிரமப்பட்டன.
தீவன விலை அதிகரிப்பு: இது போன்ற காரணங்களே விலை உயர்வுக்கு காரணம்’ என்றார். இது போக கோழி தீவனங்களுக்கான விலையும் உயர்ந்து விட்டதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். கோழிகளுக்கு வழங்கப்படும் முக்கிய தீவனங்களில் ஒன்றான சோளத்தின் விலை ரூ.26,500 டன் ஒன்றிற்கு உயர்ந்துள்ளது. சோயாவின் விலை டன் ஒன்றிற்கு ரூ.46,000- உயர்ந்துள்ளது.
குருனா அரிசி வரத்தும் குறைந்துவிட்டது. இந்த அரிசிகள் தற்போது எத்தனால் உற்பத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், கோழி தீவனங்கள் விலை அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களே சிக்கன் விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் கூறினர். சிக்கன் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள்னர். ஒரு கிலோ, இரண்டு கிலோ வாங்குபவர்கள் அரை கிலோவுடன் திரும்பி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் சிக்கன் விலை: இதேபோல் சென்னையிலும் சிக்கன் விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக 240 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ சிக்கன் இன்று 280 முதல் 300 வரை விற்பனையாகியுள்ளது. திருவள்ளூரில் ஒரு கிலோ 280க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சென்னை வாசிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இதுவரை இல்லாத அளவாக கிலோ ரூ.280க்கு விற்பனை ஆகிறது. கிராமப்புரங்களிலும் ஒரு கிலோ சிக்கன் 280 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications