"சிதைந்து கிடந்த ஆணுறுப்பு.." முகத்தை கடித்து குதறிய நாய்.. ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷன் கொடூரம்
பெங்களூர்: கர்நாடகாவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உட்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே உயிரிழந்து கிடந்த ரேணுகாசாமி எந்தளவுக்கு டார்ச்சர் செய்யப்பட்டார்... அவரது உடல் எந்தளவுக்கு கொடூரமான நிலையில் இருந்தது என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாசாமி.. நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான இவர், மருந்துக் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

நடிகர் தர்ஷனுக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு தர்ஷனின் நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா தான் காரணம் என்று ரேணுகாசாமி கருதியுள்ளார்.
கொலை: இதனால் பவித்ரா குறித்து அவர் ஆபாசமான செய்திகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ரேணுகாசாமி தனது ஆபாச போட்டோகளை பவித்ராவுக்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா, இது தொடர்பாக தர்ஷனிடம் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்தே ரேணுகாசாமி அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், இது தொடர்பாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது ரேணுகாசாமியை கட்டைகள், இரும்பு ராட்களை கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த கடுமையான காயங்களால் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளது பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் தெரிய வந்துள்ளது.
கொடூரம்: ரேணுகாசாமியின் ஆணுறுப்பு மிக மோசமாக சிதிலமடைந்த நிலையில், இருந்துள்ளது. மேலும் ரேணுகாசாமிக்கு ஒரு பக்கம் காதுகளும் வெட்டப்பட்டு இருந்ததாம்.. அவரது உடல் ஜூன் 9ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு வாய்க்காலில் கண்டறியப்பட்ட நிலையில், அப்போது அவரது முகத்தை நாய்கள் கடித்துக் குதறி இருக்கிறது.
தர்ஷனின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து சித்ரதுர்காவில் உள்ள அவரது சொந்த ஊரில் இருந்து கடந்த ஜூன் 8ஆம் தேதி தர்ஷனின் ஆட்கள் ரேணுகாசாமியை கடத்தியுள்ளனர். அவர்கள் நடிகர் தர்ஷனின் நெருங்கிய நண்பருக்குச் சொந்தமான இடத்திற்கு ரேணுகாசாமி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தான் அவரை டார்ச்சர் செய்து கொன்றுள்ளனர்.
சிசிடிவி: அன்றைய தினம் இரவு 7 மணியளவில் அந்த இடத்திற்கு நடிகர் தர்ஷன் வருவதும்.. பிறகு விடியற்காலை 3 மணிக்கு அங்கிருந்து வெளியேறுவதும் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.. அங்கு தர்ஷன் மற்றும் பவித்ரா ஆகியோர் இணைந்து ரேணுகாசாமியை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அவரை கட்டி வைத்து உடலில் மின்சாரத்தையும் பாய்ச்சியதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலால் படுகாயமடைந்த அவர் உயிரிழந்த நிலையில், அதன் பிறகு நள்ளிரவில் அவரது உடலை வாய்க்காலில் வீசியுள்ளனர். மேலும், அவரை கடத்திய தர்ஷன் ரசிகர் மன்ற உறுப்பினர்களும் தங்கள் மொபைலை வீசிவிட்டனர்.
பகீர் திருப்பங்கள்: இந்த வழக்கு விசாரணையில் பல பகீர் திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. ரேணுகாசாமி சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்த ரத்த கறை மாதிரிகளை போலீசார் சேகரித்துள்ளனர். ரேணுகாசாமியின் முடி, ஆடைகளை அங்கிருந்து அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், தர்ஷன் மற்றும் பவித்ராவின் செருப்புகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். அதைச் சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
முன்னதாக கொலை வழக்கில் வேறு ஒருவரைச் சரணடைய வைக்கவும் இவர்கள் முயற்சி செய்துள்ளனர். இதற்காக ஒருவரைப் பிடித்து அவருக்கு முதலில் 5 லட்சம் கொடுத்துள்ளனர். சில மாதம் கழித்து மேலும் 25 லட்சம் தருவதாக வாக்குறுதியும் அளித்துள்ளனர். இருப்பினும், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த கொலையில் தர்ஷனுக்கு தொடர்பு இருக்கும் உண்மை தெரிய வந்துள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications