சித்தராமையா பாதுகாப்பில் குளறுபடி? தவறான இடத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்! பெங்களூரில் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பயணித்த ஹெலிகாப்டர் நேற்று லிங்காசுகூரில் தரையிறங்கி இருக்கிறது. ஆனால், ஹெலிகாப்டர் தரையிறங்க திட்டமிடப்பட்ட இடம் வேறு, தரையிறங்கிய இடம் வேறு. இச்சம்பவம் அதிகாரிகளிடையே பெரும் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
அவர் இறங்க வேண்டிய ராய்ச்சூர் சாலை, சீனிவாஸ் லே அவுட் ஹெலிபேடிற்கு பதிலாக, விமானி கலபுரகி சாலையில் தவறாக தரையிறக்கினார். அந்த இடம் பாஜக எம்.எல்.ஏ மன்னாப்பா வஜ்ஜலுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

சித்தராமையாவின் ஹெலிகாப்டர் லேண்ட் செய்ய வேண்டிய இடத்தில் உயர் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த காவல் அதிகாரிகள் காத்திருக்க, அந்த இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலியின் ஹெலிகாப்டர் வந்திறங்கி குழப்பத்தை ஏற்படுத்தியது. முதல்வர் இறங்கிய தவறான இடத்தில் இரு காவல் உதவி ஆய்வாளர்கள் மட்டுமே இருந்தனர். தவறுணர்ந்ததும் அதிகாரிகள் விரைந்தனர்.
ஹெலிகாப்டர் தவறான இடத்தில் தரையிறக்கப்பட்டது, தீவிரமான பாதுகாப்பு குறைபாடாகும். இந்த தகவல் தொடர்பு பிழை எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கண்டறிய முறைப்படியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications