பப்ஜி விளையாட கூடாதா.. அப்பாவை துண்டு துண்டாக வெட்டிய மகன்.. ஷாக் சம்பவம்!
விளையாட அனுமதிக்காத தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்
பெங்களூரு: பப்ஜி விளையாட அப்பா அனுமதி தரவில்லை.. அதனால் அவரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார் மகன். இந்த பயங்கரம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
பெல்காமில் உள்ள சித்தேஷ்வர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர். இவர் ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் அதிகாரி ஷங்கர். இவரது மகன் ரகுவீர் கும்பர். எப்பவுமே செல்போனில் பப்-ஜி விளையாடி கொண்டே இருப்பவர் என தெரிகிறது.

இதனால் பப்ஜி விளையாடுவதை தந்தை கண்டித்துள்ளார். அப்போதும் தொடர்ந்து பப்ஜி விளையாடியுள்ளார் மகன். இதனால், மகனின் செல்போனை ஷங்கர் பிடுங்கி கொண்டதும், இன்டர்நெட்டையும் கட் செய்துட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ரகுவீர், அப்பாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
அப்போதும் ஆத்திரம் தீராமல், வீட்டில் உள்ள ஒரு அறையில் உள்ளே தள்ளி பூட்டி விட்டார். தந்தையை மட்டும், அரிவாளால் கொடூரமாக வெட்டினார். இதில் ஷங்கரின் உடல் துண்டு துண்டானது. தகவலறிந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவ்வளவு பயங்கரமாக கொலை செய்த ரகுவீர், மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications