Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளம்பரமே இல்லாமல்.. மெகா சக்சஸ் ஆன கன்னட படம் Su From So! தக் லைஃப் குரூப் பாடம் கற்கனும்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட சினிமாவின் புதிய எழுச்சிக்கு 'காந்தாரா', 'கே.ஜி.எஃப்' படங்கள் உதவியதைப் போல், தற்போது 'சு ஃப்ரம் சோ' (Su From So) திரைப்படம் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறது. ராஜ் பி ஷெட்டி தயாரிப்பில், ஜே.பி. தும்மினாட் இயக்கத்தில் உருவான இந்த ஹாரர்-காமெடி திரைப்படம், எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி வெளியாகி, வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்துள்ளது. கடந்த ஜூலை 25 அன்று திரையரங்குகளில் வெளியான 'சு ஃப்ரம் சோ', மூன்று நாட்களில் 7 கோடி ரூபாய் வசூலித்து, 3.80 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்துள்ளது. விடுமுறை நாட்கள் மட்டுமல்ல, வார நாட்களிலும் திரையரங்குகள் நிரம்பி வழிவது, படத்திற்கான வலுவான வாய்மொழி (Mouth Talk) விளம்பரத்திற்கு சான்றாகும்.

ராஜ் பி ஷெட்டி, இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளராக இருப்பதோடு, ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். 'ஒண்டு மொட்டெய கதெ' மற்றும் 'கருட கமன விருஷப வாகன' போன்ற பாராட்டப்பட்ட படங்களின் இயக்குநரான அவர், புதுமுகங்கள் நிறைந்த ஒரு படத்திற்கு தானே முகமாக இருக்க விரும்பாமல், விளம்பர வெளிச்சத்தைத் தவிர்த்தார். ஆனால், ராஜ் வெளியிட்ட ஒரு வீடியோ செய்தி தான் மொத்த ஆட்டத்தையும் மாற்றியது.

movie kannada

"புதிய திரைப்படம் சார்ந்த விளம்பர பேட்டிகள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை பார்த்து நீங்கள் சலித்துப் போனீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் எங்கள் படத்திற்கு அவற்றைச் செய்யவில்லை. நீங்கள் அனைவரும் எங்கள் நேர்மையான விளம்பரதாரர்களாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்கள் படத்தைப் பார்த்துவிட்டு, செய்தியை பரப்புங்கள்," என்று ராஜ் பி ஷெட்டி வலியுறுத்தியிருந்தார். அது நடந்துவிட்டது. அதேநேரம், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு நடித்த தக்ஃலைப் படத்திற்கு ஊர் ஊராக ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தியது படக்குழு. சில கோடிகள் ப்ரமோஷனுக்காகவே செலவிடப்பட்டன. ஆனால் திரிஷா கதாப்பாத்திரம் தேவையற்றது என ரசிகர்கள் ஆரம்ப காட்சி முதலே கருத்து சொல்லி படத்தை காலி செய்துவிட்டனர்.

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு

'சு ஃப்ரம் சோ' திரைப்படம் கர்நாடக எல்லையைத் தாண்டி, தற்போது தமிழகத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, புனே, டெல்லி, பஞ்சாப் போன்ற வட இந்திய நகரங்களில் மட்டுமின்றி, சென்னையிலும் தற்போது குறிப்பிட்ட காட்சிகளுடன் இப்படம் திரையிடப்பட்டு, அங்கும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த மொழிகளிலும் படம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, உலகளாவிய அளவில் ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் போன்ற நாடுகளிலும் 'சு ஃப்ரம் சோ' வெளியாகவுள்ளது.

துல்கர் சல்மானின் 'வேஃபரர் ஃபிலிம்ஸ்' நிறுவனம் ஆகஸ்ட் 1, 2025 முதல் மலையாள டப்பிங் பதிப்பை கேரளாவில் விநியோகிக்கும். அனில் ததானியின் 'AA ஃபிலிம்ஸ்' படத்திற்கான வட இந்திய விநியோக உரிமைகளை வாங்கியுள்ளது. 'ஃபார்ஸ் ஃபிலிம் கோ. எல்எல்சி' நிறுவனம் இந்தப் படத்தை வெளிநாடுகளில் வெளியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

"மக்கள் எங்களை தட்டி எழுப்பிவிட்டார்கள்!"

படத்தின் தயாரிப்பாளர், மற்றும் நடிகரான ராஜ் பி ஷெட்டி, படத்தின் வரவேற்பைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்து உள்ளார். "மக்கள் எங்களை தட்டி எழுப்பிவிட்டார்கள் போல இருந்தது. 'நல்ல சினிமா கொடுங்கள், நாங்கள் தியேட்டருக்கு வருவோம்' என்று அவர்கள் சத்தமாகவும் தெளிவாகவும் எங்களிடம் தெரிவித்துள்ளனர்" என்கிறார் ராஜ்.

"காந்தாரா அல்லது கே.ஜி.எஃப் போன்ற பெரிய படங்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்ற மாயை இருந்தது. ஆனால் 'சு ஃப்ரம் சோ' எளிமையான படம். இருந்தும், இது பார்வையாளர்களுடன் அதே விதத்தில் எதிரொலிக்கிறது. ஆரம்பத்தில் சரியான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றாலும், நாங்கள் இப்போது கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதி கேட்கப்படும் நிலைக்கு வந்துள்ளோம். அடுத்த வாரத்திலிருந்து இன்னும் அதிக திரையரங்குகள் கிடைக்கலாம்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரண்டாம் பாகம் இல்லை

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'சு ஃப்ரம் சோ 2' குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ராஜ் உறுதியாக மறுத்துவிட்டார். "இரண்டாம் பாகத்திற்குப் போனால், அது நாங்கள் கடைபிடிக்கும் கொள்கைக்கு எதிரானது. நாங்கள் வெற்றியைத் தேடி வரவில்லை. ஒவ்வொரு முறையும் அசல் படைப்புகளை உருவாக்க விரும்புகிறோம்" என்று அவர் குறிப்பிட்டார். புதிய திறமைகளை வளர்ப்பதே தனது நோக்கம் என்றும், இயக்குநர் ஜே.பி. தும்மினாட் ஒரு நம்பமுடியாத திறமைசாலி என்றும் ராஜ் பி ஷெட்டி புகழ்ந்தார்.

இயக்குநர் ஜே.பி. தும்மினாட் உற்சாகம்

இயக்குநர் ஜே.பி. தும்மினாட், இந்த வரவேற்பை இன்னும் நம்ப முடியாமல் இருக்கிறார். "நான் இதை எதிர்பார்க்கவில்லை. எப்படி நடந்துகொள்வது என்று எனக்குத் தெரியவில்லை" என்றார் அவர். "எங்களது ஒரே நோக்கம் மக்களை மகிழ்விப்பதுதான். ரசிகர்களிடமிருந்து கிடைத்த இந்த அன்பு மிகப் பெரியது." புக்கிங் செயலிகளில், திரையரங்குகளில் 'sold out' என்ற சாம்பல் நிற அறிவிப்புகளையும், 'orange alert' பேனர்களையும் பார்ப்பது எனக்கு நம்ப முடியாததாக உள்ளது என்றும், இந்த அனுபவத்தை ரசிப்பதாகவும் தும்மினாட் கூறுகிறார்.

இந்த 'சு ஃப்ரம் சோ' அலை தமிழ் திரையுலகிலும் ஒரு புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது. தரமான உள்ளடக்கம் இருந்தால், பெரிய நட்சத்திரங்கள் இல்லாமலும், மிகச்சிறந்த விளம்பரம் இல்லாமலும் மக்கள் ஒரு படத்தை வெற்றியடையச் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+