பெங்களூர் சிறையிலிருந்து வி.என். சுதாகரன் இன்று விடுதலை.. அடுத்தது என்ன?.. பரபரக்கும் மன்னார்குடி!
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வி.என்.சுதாகரன் இன்று வெளியாகிறார். அவரை அழைத்துவர அவரது உறவினர்கள் சிறைச் சாலைக்கு வெளியே முகாமிட்டுள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை சசிகலா, இளவரசி ஆகியோர் செலுத்திவிட்டனர். இதனால் இருவரும் விடுதலையாகிவிட்டனர்.

கொரோனா பாதிப்பு
அதே நேரத்தில் இவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். விடுதலை நாள் அன்று இருவரும் மருத்துவமனையில் இருந்தபடியே சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன் மட்டும் ரூ 10 கோடி அபராதம் செலுத்தவில்லை.

முன்கூட்டியே விடுதலை
இதனால் வி.என்.சுதாகரன் மட்டும் சிறையிலிருந்தார். அவரால் அபராதத் தொகையை செலுத்த முடியாததால் நீதிமன்ற உத்தரவின்படி மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்தார். அவர் ஏற்கெனவே சிறையில் இருந்த நாட்கள் கழிக்கப்பட்டதை அடுத்து அவர் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலையாகிறார்.

ஆடம்பரம்
அதன்படி சிறையில் இருக்கும் சுதாகரன் இன்றைய தினம் வெளியே வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவரை அழைத்து செல்ல பெங்களூரில் அவரது உறவினர்கள் முகாமிட்டுள்ளார்கள். சுதாகரன் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஆடம்பரமாக திருமணம் செய்ததும் அதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டதும் நினைவுக்கூரத்தக்கது.

சகஜ நிலை
அபராதத் தொகை தனக்கும் செலுத்தி உதவாமல் அவர்கள் இருவரும் மட்டுமே விடுதலையானதால் சுதாகரனுக்கு அவர்கள் மீது கோபம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இன்று வெளியே வந்திருக்கும் அவர் சசிகலா, இளவரசியுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பாரா இல்லை சகஜ நிலைக்கு திரும்புவாரா என தெரியவில்லை. இன்றைய தினம் ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா சென்றார். சுமார் 4 ஆண்டுகள் கழித்து அவர் முதல்முறையாக சென்றார். நாளை அதிமுக பொன் விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. இனி அதிமுகவில் என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications