கம்ப்ளைண்ட் கொடுத்தது குத்தமா? ஸ்டேசனில் அத்துமீறிய டிஎஸ்பி! வெளியான டாய்லெட் வீடியோ..பறந்த வார்னிங்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் நிலத்தகராறு தொடர்பாக புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைதாகி இருக்கிறார். டிஎஸ்பி அலுவலக கழிவறையில் வைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், புகார் கொடுக்க வரும் மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டுமெனவும், மீறும் போலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில டிஜிபி எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பணியிடங்கள், பொது இடங்களில் கூட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை கவலை கொள்ள செய்துள்ளது.

bengaluru karnataka crime

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து டெல்லி வரை போராட்டம் நடைபெற்று வருகிறது.

பாலியல் தொல்லை:

மேலும் காவல்துறையினரே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது. நிலத்தகராறு தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் தூமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் 36 வயதான இளம் பெண். அங்கு உள்ள மதுரகிரி காவல்துறையில் ராமச்சந்திரப்பா என்ற 58 வயதானவர் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

டிஎஸ்பி அலுவலகத்தில் அதிர்ச்சி:

இந்த நிலையில் 36 வயதான அந்த பெண் ராமச்சந்திராப்பாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து நிலத்தகராறு தொடர்பாக தன்னை சிலர் மிரட்டுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அந்த பெண் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என ராமச்சந்திரப்பா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை வீடியோ:

மேலும் அந்தப் பெண்ணை தனது ஓய்வறையின் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்திருக்கிறார். இந்த நிலையில் அதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. புகார் அளிக்க வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ராமச்சந்திரப்பா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

டிஎஸ்பி கைது:

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கர்நாடக மாநில காவல்துறை டிஜிபி அலோக் மோகன் மதுரகிரி டிஎஸ்பி ஆன ராமச்சந்திரப்பாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க தூமகூரு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தூமகூரு போலீசார் ராமச்சந்திரப்பா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். புகார் அளிக்க வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு அவர் கைது செய்யப்பட்டு இருப்பது கர்நாடகாவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிபி எச்சரிக்கை:

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதோடு இது தொடர்பாக அறிக்கை அனுப்பவும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொது மக்களிடம் போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகார்களில் சிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில டிஜிபி அலோக் மோகன் எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+