காவிரி நதி நீர் பரபரக்கு நடுவே.. மேகதாது அணை பிரச்சினையை கிளப்பும் கர்நாடகாவின் டிகே சிவக்குமார்
பெங்களூர்: மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், மேகதாது அணை கட்டினால் இரு மாநிலங்களும் சமமாக பயனடையும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடந்த நிலையில் கர்நாடக துணை முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தினந்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். மேலும் நாள்தோறும் 8000 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்படும் என்று கூறினார்.

இது தொடர்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளின் நீர்மட்டம் குறித்தும், மற்ற அணைகளில் நீர் இருப்பு குறித்தும் கூறப்பட்டது. இதையடுத்து இங்குள்ள நீர் கர்நாடக மக்களின் குடிநீர் மற்றும் வேளாண் பாசனத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால் தமிழகத்திற்கு நீர் வழங்க முடியாது என்று கூறப்பட்டது.
இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்திற்கு நாள்தோறும் 8000 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படும் என்று கூறினார். இதற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். இன்று தமிழகத்தில் கண்டனம் தெரிவித்து சாலை மறியில் ஈடுபட்டனர். மேலும் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று கூறினார். தொடர்ந்து இது தொடர்பாக தமிழகத்தில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தர வேண்டும் என்றும், கர்நாடகாவின் இந்த முடிவை ஏற்க முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்நாடக அரசை சட்டமன்ற அனைத்து கட்சிகள் கண்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக டிகே சிவக்குமார் கூறுகையில், "மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதால், இரு மாநிலங்களும் சமமாக பயனடையும். தமிழகத்தில் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடப்பது எங்களுக்கு ஆட்சேபம் இல்லை" என்று கூறினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications