Thakkali Srinivasan Death: திகிலூட்டிய "ஜென்ம நட்சத்திரம்" பட இயக்குநர் தக்காளி சீனிவாசன் மறைவு!
பெங்களூர்: திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான தக்காளி சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகில் படத் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, இசை, வசனம் என பன்முகத் திறமை கொண்டவர்களில் தக்காளி சீனிவாசனும் ஒருவர். இவர் கடந்த 1987ஆம் ஆண்டு பிரபு, அம்பிகா நடிப்பில் வெளியான "இவர்கள் வருங்கால தூண்கள்" என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து கதாநாயகனாக பிரபு, சரண்யாவை வைத்து "மனசுக்குள் மத்தாப்பு" படத்தையும் தயாரித்திருந்தார். அந்த படம் வெற்றி அடைந்தது. வேலு பிரபாகரன் இயக்கிய "நாளைய மனிதன்" படத்தில் முதல்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து வேலுபிரபாகரனின் "நாளைய மனிதனின்" இரண்டாம் பாகமான "அதிசய மனிதன்" படத்திலும் இசையமைத்தார். தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என இரு துறைகளிலும் வென்ற சீனிவாசன் திடீரென படத்தின் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
"ஜென்ம நட்சத்திரம்" என்ற திரில்லிங் படத்தை இயக்கினார். இந்த படத்தை பார்த்த பல சிறுவர்கள் இரவு நேரத்தில் தனியாக எழுந்து சிறுநீர் கழிக்க கூட பயந்தார்கள். அந்த அளவுக்கு ஸ்லோவாக படம் போனாலும் அதில் திகில் காட்சிகள் இருந்தன.
"விட்னஸ்" என்ற படத்தையும் தயாரித்த சீனிவாசன், அந்த படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் சித்ரா லட்சுமணன் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்த "சூரசம்ஹாரம்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு படங்கள் தயாரிப்பதை நிறுத்திக் கொண்ட அவர் பெங்களூரில் ஒரு ஆசிரமத்தை நடத்தி அங்கு தத்தெடுத்த குழந்தைகளுடன் சேவை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.
இவர் தக்காளி போல் செக்கசெவேல் என இருந்ததால் இவரை தக்காளி சீனிவாசன் என அழைத்தனர் என சொல்கிறார்கள். ஆனால் மற்றும் சிலரோ, சீனிவாசன் என்ற பெயரில் அப்போது நிறைய பேர் சினிமா துறையில் இருந்ததால் வேறுப்படுத்திக் காட்ட தக்காளி என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications