Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 தீர்மானங்கள் + 5 கோரிக்கைகள்.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில்.. திருமாவளவன் வலியுறுத்த இருப்பது இதுதான்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்ற நிலையில், இன்று பெங்களூரில் முக்கிய கூட்டத்தை கூட்டியுள்ளன. இதில் பங்கேற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, விசிக சார்பில் சில விஷயங்களை வலியுறுத்த இருக்கிறார்.

2014ம் ஆண்டு தொடங்கி 2019 என இரண்டாவது முறையாக நாடாளுமன்ற தேர்திலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜக, மூன்றாவது முறையாக 2024ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்று தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மூன்றாவது முறையும் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முறை அவர் மீண்டும் பிரதமராக வெற்றி பெற்றுவிட்டால், நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமரான ஒரே நபர் இவர்தான் என்கிற பெருமையையும் பெறுவார்.

Thirumavalavan has announced the specific resolutions to be presented at the Bengaluru opposition meeting

அதேபோல எதிர்வரும் 2025ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே இதற்காக கட்சி கடுமையாக உழைத்து வருகிறது. மறுபுறம், இமாச்சல் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும், வட மாநிலங்களில் அதன் செல்வாக்கு கடுமையாக சரிந்து வருகிறது. இதனை ஈடு செய்ய இந்த நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று கட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கையில் எடுத்திருக்கின்றனர். இதற்கான முதல் கூட்டம் பீகாரின் பாட்னாவில் நடைபெற்றது. இதில் 6 மாநிலங்களின் முதலமைச்சர் உட்பட 17 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் இந்த கூட்டத்தில் 26க்கும் அதிகமான எதிர்க்கட்சி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

வைகோ தலைமையிலான ம.தி.மு.க., இ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான கொ.தே.ம.க., தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க., இடதுசாரிக் கட்சிகளான ஆர்.எஸ்.பி, பார்வர்டு பிளாக், கேரளத்தில் முக்கிய கட்சியாக இருக்கும் ஐ.யூ.எம்.எல்., கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகள் புதியதாக இந்த கூட்டத்தில் பங்கெடுக்கின்றன. இந்த கூட்டத்தில், குறைந்தபட்ச செயல் திட்டம், பாஜகவுக்கு எதிரான இந்த கூட்டணிக்கு பெயர் சூட்டுவது, பிரதமர் வேட்பாளர் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இக்கூட்டத்தில் முதல் முறை பங்கேற்கும் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சில கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறார். அதாவது, "மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தற்போதைய சூழலில் மாநிலங்களின் உரிமைகள் தொடர்பாக சர்க்காரியா கமிஷன் மற்றும் புஞ்சி கமிட்டியின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல, தொகுதிகளை மறு பரிசீலனை செய்வது குறித்த விதிகளை இணைக்க வேண்டும். மேலும், SC, ST மற்றும் OBC சமூகங்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதிப்படுத்த சட்டப் பாதுகாப்புகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

Thirumavalavan has announced the specific resolutions to be presented at the Bengaluru opposition meeting

மத சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சட்டமன்றத் துறைகளில் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் அரசியலமைப்பில் உள்ள பாதுகாப்பிற்கு CMP (Common Minimum Program) உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இது தவிர இரண்டு தீர்மானங்களையும் இந்த கூட்டத்தில் விசிக முன்மொழிகிறது. அதன்படி, மணிப்பூரில் நிலைமையை ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகளின் குழுவை அனுப்ப வேண்டும். அதேபோல பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்கிற தீர்மானத்தையும் இயற்ற வேண்டும்" என்று விசிக சார்பில் திருமாவளவன் வலியுறுத்த இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+