சிறையிலிருந்து நேராக சாய்பாபா கோயில்... மனம் உருகி பிரார்த்தனை செய்த சசிகலா அக்கா மகன் சுதாகரன்..!
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலையான சுதாகரன், முதல் வேலையாக சாய்பாபா கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
இரு கரங்களை ஏந்தி மனம் உருகி சாய்பாபா சன்னதியில் சுதாகரன் பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இனி வரும் நாட்களில் அரசியல் பக்கம் சுதாகரன் திரும்பிக் கூட பார்க்கமாட்டார் என்றும் அவரது நாட்டமெல்லாம் ஆன்மிகப் பக்கம் மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சொத்து வழக்கு
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சுதாகரன், தண்டனைக் காலம் முடிவடைந்ததால் நேற்று விடுதலை செய்யப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தாரோ அதே தோற்றத்திலேயே இப்போதும் காணப்படுகிறார். சிகை அலங்காரம் உட்பட எதையுமே கடந்த 4 ஆண்டுகளில் அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

சாய்பாபா பக்தர்
சுதாகரனை பொறுத்தவரை அவர் தீவிர சாய்பாபா பக்தர். வம்பு, வழக்குகளில் சிக்கி அமைதியான வாழ்க்கையை தொலைத்து கைது, சிறை, அபராதம், என அடுத்தடுத்து இன்னல்களை சந்தித்த சுதாகரன், இனி வரும் நாட்களில் அமைதியை விரும்புவார் எனத் தெரிகிறது. எப்போதும் வெளியிடங்களில் கூலிங் கிளாஸ் சகிதமாக, மிரட்டலான ஆடை அலங்காரத்தோடு தன்னை ஒரு ஜமீன்தாரை போல் காட்சிப்படுத்திக் கொள்ளக் கூடிய சுதாகரன், இப்போது சற்று அதிலிருந்து மாறுபட்டுள்ளார்.

சிறை வாழ்க்கை
4 ஆண்டுகால சிறை வாழ்க்கை சுதாகரனுக்கு பல போதனைகளை வழங்கியுள்ளது. ரூ.10 கோடி அபராதம் செலுத்தக் கூட யாரும் முன்வராததால் கூடுதலாக தண்டனைக் காலத்தை அனுபவிக்க நேரிட்டார் சுதாகரன். இதனிடையே பாளையங்கோட்டை சிறையில் ஏற்கனவே அனுபவித்த தண்டனையை கருத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம், கூடுதல் தண்டனைக் காலத்தில் 89 நாட்களை கழித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் முகாம்
பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நேராக சாய்பாபா கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய சுதாகரன், இன்னும் சென்னை திரும்பவில்லை. இவரை ஒரு காலத்தில் சின்ன எம்.ஜி.ஆர். என்று அவரது ஆதரவாளர்கள் அழைத்தது திரும்பிப் பார்க்கத் தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications