இந்த நிலை எந்த கட்சிக்கும் வரக்கூடாது.. 'பெங்களூர் வடக்கு' தொகுதிக்கு வேட்பாளரை கடன் வாங்கும் கவுடா
பெங்களூர்: பெங்களூர் வடக்கு தொகுதிக்கு நிறுத்துவதற்கு வேட்பாளர்கள் இல்லாததால் காங்கிரஸுடம் வேட்பாளரை கடனாக கேட்கிறது, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ம.ஜ.த கட்சியின் எச்.டி.குமாரசாமி முதல்வராக பதவி வகிக்கிறார்.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட இந்த கூட்டணி தற்போது லோக்சபா தேர்தலிலும் தொடருகிறது. மொத்தமுள்ள 28 லோக்சபா தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 8 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

காவிரி பாசன மாவட்ட கட்சி
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை பொறுத்த அளவில், மாநிலம் முழுதும் அது பலமான அல்லது வலுவான அடித்தளம் கொண்ட கட்சி கிடையாது. மைசூரு உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகள் மற்றும் ஹாசன் மாவட்டத்தில் மட்டுமே அந்த கட்சி பலமானதாக இருந்தாலும், தங்களுக்கு 12 லோக்சபா தொகுதிகள் வேண்டும் என்று கடைசி வரை வாதிட்டு பார்த்தது.

ராகுல் காந்தி உத்தரவு
அதேநேரம், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் அதிலும் குறிப்பாக சித்தராமையா கோஷ்டியினர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 6 தொகுதிகளுக்கு மேல் கொடுப்பது அனாவசியம் என்று தேசிய தலைமையிடம், வாதிட்டனர். இருப்பினும் மஜத தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்டி தேவகவுடா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து தொகுதிகளை அதிகரிக்க வலியுறுத்தினார். இதன் காரணமாகத்தான் 8 தொகுதிகள் வழங்கப்பட்டன.

கடன் கேட்கும் ம.ஜ.த
ஆனால் பெங்களூர் வடக்கு தொகுதியில் மக்களிடம் அறிமுகமான ஒரு நல்ல வேட்பாளர் இல்லாத காரணத்தால், இப்போது அந்த தொகுதியை விட்டுத்தர முன்வந்துள்ளது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி. அதேநேரம் முழுமையாக ஒப்படைக்காமல், காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களை கடனாக, தரும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என்பது நிபந்தனை. இதற்கு காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் சம்பாதித்தாலும், சித்தராமையா கோஷ்டியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூர் வடக்கு
காங்கிரஸ் கட்சியின் வடக்கு பெங்களூர் பிரமுகர் பி.எல்.ஷங்கர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் போட்டியிட தேவகவுடா விரும்புகிறார். இது தொடர்பாக தேவகவுடாவின் மகனும், கர்நாடக பொதுப்பணித் துறை அமைச்சருமான ரேவண்ணா, சங்கரை சந்தித்து அவரது ஒப்புதல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியில் உள்ள இந்த கருத்து வேற்றுமை காரணமாக இன்னமும் பெங்களூர் வடக்கு தொகுதிக்கான வேட்பாளரை மதசார்பற்ற ஜனதா தளம் அறிவிக்கவில்லை.

போட்டியில் கவுடா
முன்னதாக, பெங்களூர் வடக்கு தொகுதியில் தேவகவுடா, போட்டியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டு தும்கூர் தொகுதியில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பெங்களூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 5 சட்டசபை தொகுதிகளை காங்கிரஸ் கட்சிதான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா!












Click it and Unblock the Notifications