கர்நாடகாவில் புது ரூல்ஸ்.. சிக்மங்களூர் வழிபாட்டு தளங்களில் ஸ்பீக்கர் பயன்படுத்த கட்டுப்பாடு.. ஏன்?
பெங்களூர்: கர்நாடகாவில் மத ரீதியாக பல்வேறு புதிய விதிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், சிக்மங்களூர் நகராட்சியில் புதிய கட்டுப்பாடுகள் சில அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஹிஜாப் அணிந்து பியூ கல்லூரிகளுக்கு வந்த மாணவியருக்கு எதிராக இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் செய்தனர்.
இதையடுத்து வகுப்பிற்கு ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளங்களை அணிந்து வர கூடாது என்று மாநில அரசு கட்டுப்பாடு விதித்தது. இதற்கு எதிராக அங்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

ஹிஜாப் தடை
ஆனால் இந்த வழக்கில் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. இது இஸ்லாமில் உள்ள அடிப்படை பழக்க வழக்கங்களில் ஒன்று கிடையாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. இதனால் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும்.

ஸ்பீக்கர்
ஹிஜாப் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது வழிபாட்டு தளங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா முழுமைக்கும் இந்த தடை விதிக்கப்படவில்லை. சிக்மங்களூர் நகராட்சியில் இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி அங்கு இருக்கும் அனைத்து வார்டுகளிலும் உள்ள மசூதிகள், சர்ச்கள், கோவில்களில் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

என்ன காரணம்
முன்பே அங்கு லவுட் ஸ்பீக்கர் வைக்க பர்மிஷன் வாங்கி இருக்கும் பட்சத்தில் அதை நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் வழிபாட்டு தளங்களில் இருக்கும் ஸ்பீக்கர்கள் அகற்றப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல்வேறு பிரிவை சேர்ந்த மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும்.

ஒலி மாசு
ஒலி மாசு ஏற்படுவதாக பலர் வைத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும். அனைத்து கோவில், மசூதி, சர்ச்சில் இது தொடர்பான சோதனைகள் செய்யப்படும் என்றும் அந்நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மசூதிகளில் ஸ்பீக்கர் வைக்கப்பட்டு தொழுகைக்கு மக்களை அழைக்கும் நிலையில் இந்த புதிய கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடுப்பி கோவில்
முன்னதாக உடுப்பியில் உள்ள ஹொஸா மார்குடி கோவிலில் நடக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது.இங்கு எல்லா வருடமும் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கடை போட்டு வந்தனர். இந்த வருடம் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு கடை போடும் ஏலத்தை இந்துக்களுக்கு மட்டுமே கொடுப்போம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்த காரணத்தால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் இடையே இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்தான் சிக்மங்களூரில் லவுட் ஸ்பீக்கர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications