பெங்களூரில் விமானப்படை அதிகாரி மீது நடந்த தாக்குதலில் எதிர்பாராத திருப்பம்.. வெளியான சிசிடிவி ஆதாரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் விமானப்படை விங் கமாண்டராக பணியாற்றும் அதித்யா போஸ் தனது மனைவியுடன் காரில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போதுபைக்கில் வந்த டெலிவரி பாய், கன்னடத்தில் திட்டியதாகவும் பின்னர் அவரை டெலிவரி பாய் தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக டெலிவரி பாயை விமான படை அதிகாரி 20 முதல் 30 முறை குத்துவதாக சிசிடிவி வீடியோ ஆதாரம் வெளியாகி உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், குறிப்பட்ட விமான படை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பெங்களூருவில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அதித்யா போஸ் மற்றும் அவரது மனைவி மதுமிதா, டிஆர்டிஓ காலனி, சிவி ராமன் நகரில் இருந்து விமான நிலையம் நோக்கி காரில் பயணித்துள்ளனர். அப்போது ஒரு பைக் ஓட்டுநர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். காரை ஓட்டிய விவகாரத்தில் கோபம் அடைந்த பைக் ஓட்டுனர், விமானப்படை அதிகாரியை மறித்து கன்னடத்தில் திட்டத் தொடங்கியதாக கூறப்படுகிறது. திடீரென இது சண்டையாக மாறி உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதில் விமானப்படை அதிகாரி அதித்யா போஸ் காயமடைந்துள்ளார்.

Unexpected twist in attack on Air Force officer in Bangalore CCTV evidence released

இந்நிலையில் காயம் அடைந்த விமானப்படை அதிகாரி அதித்யா போஸ் இந்த தாக்குதல் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தனது காயங்களைக் காட்டினார். ரத்தம் வடிந்த நிலையில் சம்பவம் குறித்து விவரித்தார். அந்த வீடியோவில் அதித்யா போஸ் கூறுகையில், அந்த பைக் ஓட்டுநர் முதலில் திட்டிக்கொண்டே வந்தார்கள் ஆனால் எனது காரில் 'டி.ஆர்.டி.ஓ.' ஸ்டிக்கரைப் பார்த்ததும் இன்னும் கோபமடைந்து, எங்களைத் திட்டவும் அடிக்கவும் தொடங்கிவிட்டார் என்று கூறினார். அந்த பைக் ஓட்டுநர் சாவியால் நெற்றியில் அடித்ததாகவும், காரின் மீது கல்லை எறிந்து தாக்கியாகவும் கூறப்பட்டது.

வேடிக்கை பார்த்த பொதுமக்கள் யாரும் உதவி செய்யவில்லை என்றும் விமானப்படை அதிகாரியையும் அவரது மனைவியையும் தான் உள்ளூர் மக்கள் திட்டியதாகவும், கன்னடத்தில் அந்த விமானப்படை தம்பதி பேசாத நிலையில், உள்ளூர் இளைஞருக்கே அவர்கள் ஆதரவாக வந்தாகவும் கூறப்படுகிறது. இந்த விவாகரத்தில் விமானப்படை அதிகாரி போஸ் இஸ்டாவில் கூறியிருந்த நிலையில், வீடியோ வேகமாக பரவியது. இதையடுத்து பைக்கில் வந்து தாக்கிய இளைஞர் குறித்து விசாரணை நடந்தது. அவர் டெலிவரி பாய் என்பது தெரியவந்தது.
அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட டெலிவரி பாய், பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆவார். ஐ.ஏ.எஃப் அதிகாரியும் அந்த இளைஞரை 20 முதல் 30 முறை குத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிசிடிவி ஆதாரம் வெளியாகி உள்ளது. ரத்த காயத்துடன் விமானப்படை அதிகாரி உள்ள நிலையில், யார் முதலில் யாரை அடித்தார்கள் என்பது தெரியவில்லை என நேரில் பார்த்த சாட்சிகள் கூறினார்கள்.. தற்போது விசாரணைக்கு பிறகே என்ன நடந்தது என்பது தெரியவரும். இதனிடையே விமானப்படை அதிகாரிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்த நெட்டிசன்கள், குறிப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+