மணமகனுக்கு பரிசு கொடுத்த பெங்களூர் அமேசான் ஊழியர்... மணமேடையில் யாருமே எதிர்பார்க்காத சம்பவம்
பெங்களூர் : பெங்களூரில் அமேசான் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தவர் வம்சி என்பவர் ஆந்திராவின் கர்னூலில் உள்ள தனது நண்பனுக்கு திருமணத்தின்போது பரிசு கொடுக்க வந்தார். அந்த பரிசை சர்ப்ரைஸ் கிஃப்டடாக வைத்திருந்தார். அந்த பரிசை நண்பனான மகனுக்கு கொடுத்தார். என்ன பரிசு என்ற ஆர்வத்துடன் காத்திருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பரிசை கொடுத்த நண்பன் மேடையில் மயங்கி விழுந்தார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
பொதுவாக திருமணம் என்றாலே இருமணங்கள் இணைவ்து என்பதை தாண்டி, திருமண விழாவில் பங்கேற்க வரும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருமே பரிசுகளை வழங்குவார்கள். இதுவரை சந்திக்காத பள்ளி, கல்லூரி தோழர்களை நேரில் சந்திக்க முடியும். திருமண விழாவில் நண்பர்களுடன் ஆடிப்பாடி மகிழ முடியும். நண்பனின் திருமணத்திற்கு போகிறவர்கள் வெறும் கையுடன் போகாமல் தங்களால் முடிந்த பரிசுகளை தருவார்கள்.

கை கடிகாரம், கண்ணாடி, சுவர் கடிகாரம், ரொக்க பரிசு, தங்க மோதிரம், தங்க செயின், நினைவு பரிசுகள், பொம்மை, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, ஸ்கூட்டர், கார் என அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல் பரிசுகளை அள்ளி வழங்குவாரகள். அப்படித்தான் பெங்களூர் அமேசான் ஊழியர் ஆந்திராவில் உள்ள திருமணம் ஆக உள்ள நண்பனுக்கு பரிசு கொடுத்துள்ளார். ஆனால் மணமேடையிலேய சரிந்து விழுந்து உயிரை விட்டுள்ளார் .
பெங்களூரில் அமேசான் நிறுவனத்தில் வம்சி என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பரின் திருமணம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் பெனுமடா என்ற கிராமத்தில் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க பெங்களூரில் இருந்து சென்ற வம்சி, அங்கு நடந்த திருமண நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டார்.
திருமணம் முடிந்ததும் உற்றார், உறவினர்களும், நண்பர்களும் மணமக்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போது பெங்களூர் அமேசான் ஊழியர் வம்சியும் தான் வாங்கி வந்த பரிசுப்பொருளை மணமகனிடம் கொடுத்தார். மேலும் அந்த பரிசை மணமேடையில் வைத்தே அவர் பிரித்து பார்த்தார். சுற்றியிருந்த நண்பர்கள் அனைவரம் அந்த பரிசு என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் காத்திருந்தனர். அந்த சமயத்தில் வம்சி திடீரென மயங்கி விழுந்தார். கீழே விழ முயன்ற அவரை, சக நண்பர்கள் கைகளால் தாங்கிப்பிடித்தார்கள்.
அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாரடைப்பு காரணமாக வம்சி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். வம்சியின் மரணத்தால், திருமண வீடு துக்க வீடாக மாறியது. இதுதொடர்பான காட்சி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications