தேவையான பாடம் மட்டுமே இருக்கும்.. ஆர்எஸ்எஸ் பாடப்பிரிவு நீக்கப்படுகிறதா? கர்நாடக அமைச்சர் பரபர பதில்
பெங்களூர்: கர்நாடகாவில் மாணவர்கள் நலன் கருதியே பாடப்புத்தகங்களில் திருத்தம் கொண்டு வரப்பட இருப்பதாகவும் பாஜகவிற்கு எதிராக எதையும் செய்யவில்லை என்றும் கர்நாடக கல்வித்துறை அமைச்சர் மது பங்கரப்பா தெரிவித்தார்.
கர்நாடகாவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு விவகாரங்களில் முந்தைய பாஜக அரசு எடுத்த நிலைப்பட்டிற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இதனால், அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக எம்.எல்.சி, பிகே ஹரிபிரசாத், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனரான கேசவ பலிராம் ஹெட்கேவர் ஒரு கோழைத்தனமானவர் எனவும் பிரிட்டிஷ்காரர்களுக்கு 6 முறை மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும் விமர்சித்து இருந்தார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பான வாதங்களுக்கு வித்திட்ட நிலையில், பாடப்புத்தகத்தில் உள்ள கேசவ பலிராம் ஹெட்கேவர் குறித்த அத்தியாயம் நீக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்தது.
ஏனெனில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பாஜக ஆட்சியில் இருந்த போது பள்ளி பாடப்புத்தகத்தில் செய்த மாற்றங்களை மாற்றி அமைப்போம் என்று கூறியிருந்தது. இந்த நிலையில், கர்நாடக கல்வித்துறை அமைச்சர் மது பங்கரப்பாவிடம், பாடப்புத்தகத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் குறித்த பாடத்தை நீக்கும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மது பங்கரப்பா, பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பாடங்கள் இருக்கும். அந்த பாடங்களை அவர்கள் படிக்க முடியும். பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து எந்த பகுதி நீக்கப்படும் என்பது குறித்து குறிப்பிட்டு சொல்ல நான் விரும்பவில்லை. இந்த முடிவை நிபுணர் குழு எடுக்கும்" என்றார்.
மேலும், முந்தைய பாஜக அரசை கடுமையாக விமர்சித்த பங்கரப்பா, இது பாஜகவின் வெர்ஷன். ஏனெனில், குழந்தைகளின் மனநிலையையும் அவர்களுக்கு என்ன பாடம் கொடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் பாஜகவிற்கு எதிராக எதையும் செய்யவில்லை. என்று கூறினார். பெங்களூர்: கர்நாடகாவில் மாணவர்கள் நலன் கருதியே பாடப்புத்தகங்களில் திருத்தம் கொண்டு வரப்பட இருப்பதாகவும் பாஜகவிற்கு எதிராக எதையும் செய்யவில்லை என்றும் கர்நாடக கல்வித்துறை அமைச்சர் மது பங்கரப்பா தெரிவித்தார்.
கர்நாடகாவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு விவகாரங்களில் முந்தைய பாஜக அரசு எடுத்த நிலைப்பட்டிற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இதனால், அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக எம்.எல்.சி, பிகே ஹரிபிரசாத், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனரான கேசவ பலிராம் ஹெட்கேவர் ஒரு கோழைத்தனமானவர் எனவும் பிரிட்டிஷ்காரர்களுக்கு 6 முறை மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும் விமர்சித்து இருந்தார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பான வாதங்களுக்கு வித்திட்ட நிலையில், பாடப்புத்தகத்தில் உள்ள கேசவ பலிராம் ஹெட்கேவர் குறித்த அத்தியாயம் நீக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்தது.
ஏனெனில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பாஜக ஆட்சியில் இருந்த போது பள்ளி பாடப்புத்தகத்தில் செய்த மாற்றங்களை மாற்றி அமைப்போம் என்று கூறியிருந்தது. இந்த நிலையில், கர்நாடக கல்வித்துறை அமைச்சர் மது பங்கரப்பாவிடம், பாடப்புத்தகத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் குறித்த பாடத்தை நீக்கும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மது பங்கரப்பா, பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பாடங்கள் இருக்கும். அந்த பாடங்களை அவர்கள் படிக்க முடியும். பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து எந்த பகுதி நீக்கப்படும் என்பது குறித்து குறிப்பிட்டு சொல்ல நான் விரும்பவில்லை. இந்த முடிவை நிபுணர் குழு எடுக்கும்" என்றார்.
மேலும், முந்தைய பாஜக அரசை கடுமையாக விமர்சித்த பங்கரப்பா, இது பாஜகவின் வெர்ஷன். ஏனெனில், குழந்தைகளின் மனநிலையையும் அவர்களுக்கு என்ன பாடம் கொடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் பாஜகவிற்கு எதிராக எதையும் செய்யவில்லை. என்று கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications