சிலையை தொட்டதால் "ஃபைன்"! வீட்டில் சாமி படங்களை தூக்கிய குடும்பம்! பதிலுக்கு வந்த அம்பேத்கர் படம்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் சாமி சிலையை தொட்டதற்காக பட்டியலினத்தை சேர்ந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது சிறுவனின் வீட்டிலிருந்த சாமி படங்களை அகற்றிவிட்டு அங்கு புத்தர் மற்றும் அம்பேத்கர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிறுமியின் தாய் எவ்வளவோ கெஞ்சியும் சாமி தீட்டாகிவிட்டது எனவே இதனை கழிக்க ரூ.60 ஆயிரம் கொடுத்தே ஆக வேண்டும் என கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் வற்புறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கம்
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள உள்ளேரஹல்லியில் அமைந்துள்ளது இந்து மதத்தின் பூதம்மா கோயில். கிராம தெய்வமான இக்கோயிலுக்குள் காலங்காலமாக பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் செல்வதை தவிர்த்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் செல்லக்கூடாது என்கிற கட்டுப்பாடு எதுவும் இல்லையென்றாலும், இவ்வூரில் விநோதமான பழக்கம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அதாவது, பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் இக்கோயிலுக்குள் சென்றால் சாபத்திற்கு ஆளாகி விடுவார்கள் என்பதால் இவர்கள் கோயிலுக்குள் செல்வதில்லை. இது பழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஊர்வலம்
இப்படி இருக்கையில் கடந்த வாரம் இந்த பூதம்மா சாமி சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டிருக்கிறது. இந்த சிலையை பார்த்து ஆச்சரியமடைந்த பட்டியலினத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் கோயில் கருவறைக்குள் சென்று சிலையை தொட்டு பார்த்திருக்கிறான். இதைக்கண்ட இதர சமூகத்தினர் பஞ்சாயத்து கூட்டி சிறுவனின் குடும்பத்தினரை கிராமத்தினர் முன்னர் அவமானம் செய்துள்ளனர். மேலும், சிறுவன் தொட்டதால் சாமி தீட்டாகி விட்டது என்றும், இதனை கழிக்க ரூ.60 ஆயிரம் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அபராதம்
ஆனால் சிறுவனின் குடும்பம் கூலி வேலை செய்து வருவதால் இவ்வளவு பெரிய தொகையை எங்களால் செலுத்த முடியாது என்று கூறியுள்ளனர். இதை ஏற்காத பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஊர் நிர்வாகிகள் குடும்பத்தினரை மேலும் இழிவுபடுத்தியுள்ளனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 'அம்பேத்கர் சேவா சமிதி' எனும் தலித் நல அமைப்பினர் இந்த பிரச்னையில் தலையிட்டு பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஊர்க்காரர்களின் கருத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

வழக்குப்பதிவு
பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது சிவில் உரிமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது இதனைத்தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் இருந்த இந்து மத தெய்வங்களின் படங்களை அகற்றிவிட்டு அங்கு புத்தர் மற்றும் அம்பேத்கரின் படங்களை வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications