கிளர்க் டூ முதல்வர்.. உச்சம் தொட வைத்த எடியூரப்பாவின் உழைப்பு!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் பூகனகெரே என்ற குக்கிராமம் உள்ளது. திரைப்படங்களில் காண்பது போல், விவசாயம் செழித்தோங்கும் அழகான அந்தக் கிராமத்தில் பிறந்தவர்தான் எடியூரப்பா.
பள்ளி படிப்பை முடித்த பின்பு ஷிமோகாவுக்கு குடிபெயர்கிறார். ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் மீது கொண்ட பற்று காரணமாக 1965 முதல் அந்த இயக்கத்தின் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர் எடியூரப்பா. பெரியளவு வசதி இல்லாத குடும்பப் பின்னணி என்பதால், பணிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் எடியூரப்பாவுக்கு ஏற்படுகிறது.

கல்லூரி படிப்பை ஒரு வழியாக முடித்த கையோடு, கர்நாடக அரசின் சமூக நல வாரிய அலுவலகத்தில் கிளர்க் ஆக பணியில் இணைகிறார். இருப்பினும் அவர் மனதில் இருந்த நெருடல் அவரை பணி செய்யவிடவில்லை. அரசியல் ஆர்வம் காரணமாக அரசுப்பணியை ராஜினாமா செய்த அவர், ஷங்கர் ரைஸ் மில்லில் பணிக்கு சேர்கிறார்.
இரண்டாண்டு காலம் உருண்டோடுகிறது. எடியூரப்பாவின் சுறுசுறுப்பையும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருப்பதையும் உணர்ந்த ரைஸ் மில் முதலாளி வீரபத்ர சாஸ்திரி தனது மகள் மித்ரா தேவியை எடியூரப்பாவுக்கு மணம் முடித்து கொடுக்கிறார். கூடவே மருமகன் பணத்துக்கு சிரமப்படக் கூடாது என்று, ஷிகாரிபுராவில் ஹார்டுவேர் கடை ஒன்றையும் வீரபத்ர சாஸ்திரி அமைத்துக்கொடுகிறார்.
வருமானத்துக்கு குறைவில்லை என்ற நிலை வந்தவுடன் எடியூரப்பாவுக்குள் ஒளிந்திருந்த அரசியல் ஆசை வேர் விட்டு படரத் தொடங்கியது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஷிகாரிபுரா நகர செயலாளர் பதவி 1972-ல் எடியூரப்பாவை தேடி வந்தது. 1973-ல் ஷிகாரிபுரா நகராட்சி கவுன்சிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1975-ல் மிசாவில் கைது செய்யப்பட்ட எடியூரப்பா, 45 நாட்கள் பெல்லாரி சிறையில் இருந்தார். அந்த சிறைவாசம் அவரை மேலும் பட்டை தீட்டியது. ஒருவகையில் அவர் அரசியல் வாழ்க்கைக்கு அது திருப்புமுனை.
பின்னர் ஜன சங்கம், ஜனதா கட்சியுடன் இணைக்கப்படுகிறது. 1977-ல் ஷிமோகா பகுதியில் ஜனதா கட்சியை வலுப்படுத்த கடுமையாக, உழைத்ததன் விளைவு, 1983-ல் முதன் முறையாக ஷிகாரிபுரா தொகுதி எம்.எல்.ஏ.வானார் எடியூரப்பா. அதன் பின்னர் தற்போது வரை 7 முறை அந்த தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தொகுதிவாசிகளிடம் ஒரு உறவுக்காரரை போல் பழகக்கூடியவர் எடியூரப்பா. ஜனசங்கம், ஜனதா கட்சி எல்லாம் ஒன்றிணைந்து பா.ஜ.க.வாக உருவெடுத்தப் பின்பு அந்தக் கட்சியின் வேட்பாளராக 1985-ல் ஷிகாரிபுராவில் மீண்டும் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறுகிறார். அவருடன் வெற்றி பெற்ற இன்னொருவர் வசந்த் பங்கேரா. பெல்தங்கடி தொகுதியில் இவர் வெற்றி பெறுகிறார். முதல்முறையாக 2 எம்.எல்.ஏ.க்களை பாஜக பெற்றிருந்த நிலையில், வசந்த் பங்கேரா காலப்போக்கில் காங்கிரஸில் இணைந்துவிட்டார்.
அதன் பிறகு ஒன் மேன் ஆர்மியாக இருந்தார் எடியூரப்பா. அகில இந்திய தலைமையின் கவனத்தை ஈர்த்த இவருக்கு கட்சிப்பதவிகள் தேடி தேடி வந்தன. கர்நாடகாவில் 1987-ல் கடும் வறட்சி ஏற்பட்ட போது, சைக்கிள் யாத்திரையை தொடங்கி மாநிலத்தின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பயணித்து தன்னை மக்கள் அறியும் தலைவராக உயர்த்திக்கொண்டார். இப்படி படிபடியாக உயர்ந்த இவருக்கு முதலமைச்சர் பதவியும் தேடி வந்தது.
தென்றல் வீசிய எடியூரப்பாவின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. நில ஊழல் வழக்கு, சுரங்க வழக்கில் இவர் பெயரும் அடிபட்டது. இந்த வழக்குகளால் கடந்த 2011-ல் முதலமைச்சர் பதவியை இழந்து சிறைக்கு சென்றார். 23 நாட்கள் சிறைவாத்திற்கு பின்னர் வெளியே வந்த எடியூரப்பா, பாஜக மேலிடத் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2012-ம் ஆண்டு 'கர்நாடக ஜனதா பக்ஷா' (கே.ஜே.பி.) என தனிக்கட்சி தொடங்கினார்.
பின்னர் காலஒட்டத்தில் மனக்கசப்புகளை மறந்து மீண்டும் பாஜகவில் ஐக்கியமானார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 105 இடங்களை பெற்றும் ஆட்சியை கோட்டைவிட்ட பாஜக, இப்போது அதை சாதித்துவிட்டது. பொதுவாக பாஜகவில் 75 வயதுக்கு மேல் பதவி அளிக்கப்படாது. கடந்த காலங்களில் கட்சிக்காக உழைத்ததை சீர்தூக்கிப்பார்த்து 76 வயதுடைய எடியூரப்பாவை மீண்டும் முதல்வர் ஆக்கியுள்ளது பாஜக தலைமை. அவரும் தனது ஆஸ்தான ஜோதிடர் குறித்து கொடுத்த நேரத்தில், வெள்ளியன்று 4-வது முறையாக கர்நாடக முதல்வராக பதவியேற்றுகொண்டார்.
-
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications