போலீஸ் கான்ஸ்டபிள் மகனாக பிறந்து.. "கேஜிஎப் கருடன்" போல மாறிய சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி!
பெங்களூர்: கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில், கேஜிஎப் படத்தில் வரும் தங்கச் சுரங்கத்தை போல ஒரு இரும்பு சுரங்கத்தை நடத்தி, சட்ட விரோதமாக ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ள ஜனார்த்தன ரெட்டி பாஜகவில் இணைந்தது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடாக தாது கடத்தியது மட்டுமல்லாது ஜாமீனில் வெளியே விடுவதற்காக நீதிபதிக்கே ரூ.40 கோடி லஞ்சம் தர முன்வந்த குற்றச்சாட்டையும் எதிர்கொண்டுள்ள ஜனார்த்தன ரெட்டி, ஊழல் எதிர்ப்பு கட்சியாக தன்னை முன்னிறுத்தும் பாஜகவில் இணைக்கப்பட்டது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஜனார்த்தன ரெட்டி எப்படியெல்லாம் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பினார், பாஜக டெல்லி மேலிடத்தையே தனது சுண்டு விரலால் ஆட்டுவித்தார். கூவத்தூர் பார்முலாவுக்கு முன்பாகவே, இந்தியா முழுக்க ஜனார்த்தன ரெட்டியின் எம்எல்ஏக்கள் ரிசார்ட் பார்முலா என எப்படி பெயர் பெற்றது. நிஜமாகவே கேஜிஎப் பட கருடன் போல அரசாண்ட ஜனார்த்தன ரெட்டி வீழ்த்தப்பட்டது எப்படி? அத்தனையையும் விவரிக்கிறது இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோ. பாருங்கள்!!













Click it and Unblock the Notifications