அண்ணி சொல்லியும் கேக்கல.. அண்ணன் மன்றாடியும் அடங்கல.. தத்தளித்த தம்பி.. ஒரு நொடியில் இந்த முடிவு
பெங்களூரு: புத்தி தடுமாறியதால், ஒருகொலை வரை சென்றிருக்கிறது.. கர்நாடகாவில் அப்படியென்ன நடந்தது?
கர்நாடகா மாநிலம், சாமராஜநகரில் உள்ளது சவுடஹள்ளி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் பிரசாத்.. இவருக்கு 45 வயதாகிறது.. இவரது தம்பி குமார்.. இவருக்கு 39 வயதாகிறது.

அண்ணனுக்கு கல்யாணம் ஆனதிலிருந்தே, அண்ணி மீது குமாருக்கு ஒரு கண் இருந்து வந்ததாம்.. புத்தி தடுமாறியதில், தீராத மோகம் கொண்டுள்ளார்.. இதனால், அண்ணி என்றும் பாராமல், அடிக்கடி தகாத உறவுக்கு குமார் அழைத்து வந்துள்ளார்..
இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணி, தன்னுடைய கணவர் பிரசாத்திடம் இதை பற்றி முறையிட்டுள்ளார். பிரசாத்தும், தன்னுடைய தம்பியை கண்டித்திருக்கிறார்.. ஆனால், குமார் எவ்வளவு புத்தி சொல்லியும் கேட்காமல் அடங்கவில்லையாம்.. மறுபடியும் மறுபடியும் அண்ணியை தகாத உறவுக்கு வற்புறுத்தியதால், சகோதரர்களுக்குள் தகராறும், அடிதடியும் ஏற்பட்டு வந்துள்ளது.
குற்றச்சாட்டு: நேற்றிரவும் இப்படி ஒரு தகராறு வெடித்திருக்கிறது.. அப்போது குமார் தன்னுடைய அண்ணனிடம், "உன் மனைவி யோக்கியமா? இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்கிறாரே" என்று குற்றம் சாட்டியுள்ளார்.. இதைக்கேட்டதும், அண்ணன், தம்பிக்கு இடையே மறுபடியும் அடிதடி மோதல் ஏற்பட்டது..
அப்போது ஆத்திரமடைந்த குமார், கத்தியால் தன்னுடைய அண்ணன் பிரசாத்தை சரமாரியாக குத்தினார்.. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார்.. இந்த கொலை குறித்த தகவல் அறிந்த குண்டலுப்பேட்டை போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.. அத்துடன் கொலை செய்யப்பட்ட பிரசாத் உடலை மீட்டு, போஸ்ட் மார்ட்டத்துக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு: அண்ணனை கொலை செய்த குமாரை போலீஸார் கைது செய்தனர்... இந்த சம்பவம் சவுடஹள்ளி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications