எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு INDIA என்ற பெயரை முன்மொழிந்தது யார்? சீக்ரெட்டை உடைத்த தொல் திருமாவளவன்
பெங்களூர்: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயரை முன்மொழிந்தது யார் என்பது குறித்து செய்தியாளர்களிடம் தொல் திருமாவளவன் பேசினார்.
பெங்களூரில் இன்று எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நேற்றும் ஆலோசனை நடந்த நிலையில், இன்று 2-வது நாளாக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனும் இந்தக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொல் திருமாவளவன் கூறியதாவது:- இன்று நடைபெற்ற கூட்டம் வெற்றிகரமாக அமைந்தது. 27 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள். 7 மாநில முதல்வர்கள் பங்கேற்றார்கள். மனம் திறந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். மம்தா பானர்ஜி இந்தியா என்ற பெயர் வரும் வகையில் பெயரை முன்மொழிந்தார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின், மம்தா பானர்ஜி அளித்த பெயரை சரி என்று வழிமொழிந்தார். ராகுலும் இதையே கூறினார்.
கடைசியில் அனைவரும் ஒருங்கிணைந்து INDIA என்ற பெயரிலேயே இந்த கூட்டணியை அமைப்பது என்ற ஒருமித்த முடிவு மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டது. மோடி என்னுடைய இந்தியா என்று உரிமை கோருகிறார். குறிப்பிட்ட சமூகத்தின் இந்தியா என உரிமை கோருகிறார். இது மக்களுக்கான இந்தியா, அனைவருக்குமான இந்தியா என்று சொல்லக்கூடிய வகையிலே இந்த முடிவை எல்லோரும் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.
அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று கார்கே அறிவித்து இருக்கிறார். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். நிதிஷ் குமார் இன்னும் சில கட்சிகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பாஜக சிதறிப்போன கூட்டணியை ஒட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணி பெயரளவில் தான் உள்ளது. 10 ஆண்டுகளில் ஒரு இடத்தில் கூட என்.டி.ஏ என்ற பெயரில் கூட்டத்தை கூட்டியதே இல்லை.
ஆகவே மறுபடியும் உயிரூட்டுவதற்கான முயற்சியாகத்தான் டெல்லியில் இந்தக் கூட்டத்தை கூட்டியிருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். பொது சிவில் சட்டத்தை வரும் கூட்டத்தொடரில் பாஜக அறிமுகம் செய்தால் ஒருங்கிணைந்து அதை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தை நாங்கள் முன்மொழிந்து இருக்கிறோம். பிரதமர் வேட்பாளர் இப்போது தேவையில்லை. முதலில் இந்தக் கூட்டணியை உருவாக்கி வலுவாக்க வேண்டும்.
மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். ஆகவே அது பற்றிய விவாதம் இப்போது எழவில்லை. கூட்டணி உருவானதே வெற்றிதான். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாது என்று கனவு கண்டு கொண்டு இருந்தார்கள். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கி இருப்பதே எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்து இருக்கும் முதல் வெற்றி. மகத்தான வெற்றியாகும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பெரிய அளவில் விவாதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications