Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடியூரப்பாவின் கண்ணீர் சும்மா விடுமா? பாஜக தோல்விக்கு பிஎல் சந்தோஷ் தான் காரணம்! ஷெட்டர் ஓபன் டாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்து காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. தோல்விக்கான காரணம் குறித்து பாஜக ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் பாஜக தோல்விக்கு ஒருவர் தான் காரணம் என முக்கிய புள்ளியை சுட்டிக்காட்டி இருப்பது பாஜகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. பாஜக மொத்தம் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளில் மட்டுமே வாகை சூடியுள்ளனர்.

இந்த தேர்தலில் பாஜகவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இவர் உப்பள்ளி -தார்வார் சென்ட்ரல் தொகுதியில் 6 முறை தொடர்ந்து வென்ற நிலையில் போட்டியிட டிக்கெட் கொடுக்கவில்லை.

Why BJP defeat in Karnataka Election, Jagadish Shettar finally revealed

இதனால் அவர் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்து போட்டியிட்டார். இருப்பினும் உப்பள்ளி-தார்வார் தொகுதியில் அவர் பாஜக வேட்பாளர் மகேஷ் தென்கினகாயிடம் சுமார் 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார். இருப்பினும் ஜெகதீஷ் ஷெட்டரால் வட கர்நாடகா மாநிலங்களில் லிங்காயத் சமுதாயத்தினரின் ஓட்டுக்கள் காங்கிரசுக்கு கிடைத்தது.

இந்நிலையில் தான் ஜெகதீஷ் ஷெட்டர் தேர்தலில் தோல்வியடைந்தாலும் கூட அவருக்கு துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவி வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இன்று பெங்களூரில் ஜெகதீஷ் ஷெட்டர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மாநிலத்தில் பாஜக தோல்வியடைந்ததற்கான காரணம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:

லிங்காயத் மக்கள் எப்போதும் பாஜகவின் பக்கம் நிற்பார்கள். ஆனால் இந்த முறை வட கர்நாடகா லிங்காயத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். லிங்காயத் தலைவர்களுக்கு தொல்லை கொடுத்தால் அதனை லிங்காயத் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். என்னை பாஜக அவமானப்படுத்தியது. இதனால் அந்த கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்தேன்.

பாஜகவில் எனது சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதால் தான் இந்த முடிவை எடுத்தேன். பாஜக தலைவர்கள் என்னை அவமானப்படுத்தினர். பாஜக தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் கட்சிக்குள் இருக்கும் லிங்காயத் தலைமையை பலவீனப்படுத்த விரும்பி அதனை செய்துள்ளார். இதனால் தான் கர்நாடகாவில் பாஜக தோல்வியடைந்துள்ளது.

Why BJP defeat in Karnataka Election, Jagadish Shettar finally revealed

இந்த தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சியில் லிங்காயத் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் 46 பேர் போட்டியிட்ட நிலையில் 37 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவில் 69 பேர் களமிறங்கிய நிலையில் வெறும் 15 பேர் மட்டுமே ஜெயித்துள்ளனர். லிங்காயத் தலைவர்களான என்னையும், எடியூரப்பாவையும் அவமானப்படுத்தியதற்கான விலையை தற்போது பாஜக கொடுத்துள்ளது.

முதல்வர் பதவியில் இருந்து நீக்கியபோது எடியூரப்பா சிந்திய கண்ணீர் பாஜகவை சும்மா விட்டு விடுமா? கர்நாடகா முதல்வராக எடியூரப்பா இருந்தார். அவரை 2 ஆண்டுக்கு பிறகு ராஜினாமா செய்ய கூறியது ஏன்? அவரை ஏன் முழுமையாக முதல்வர் பதவியை தொடர விடவில்லை?. அதாவது மாநிலத்தில் பாஜகவில் உள்ள பலம்வாய்ந்த தலைவர்களை ஒதுக்கி கட்சியை பலவீனப்படுத்துவது தான் இதன் நோக்கம்.

மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எப்போதும் கண்களை திறந்து வைத்துள்ளனர். லிங்காயத் தலைவர்களை பாஜக அவமானப்படுத்தியதை அவர்கள் நினைவில் வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி இப்போது என்னுடன் இருக்கிறது. முதல்வர் தேர்வு செய்வதற்கான பணி நடந்து வருகிறது. அதற்கு பிறகு அமைச்சர் பதவி குறித்த அறிவிப்புகள் வெளியாகும். அதற்கு பொறுத்திருக்க வேண்டும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+