நிலாவில் கடும் குளிர் காலம் ஆரம்பம்.. உயிர்த்தெழ முடியாமல்... இன்றுடன் விடைபெறுகிறது விக்ரம் லேண்டர்
Recommended Video
பெங்களூரு: சந்திரனில் கடும் குளிர்காலம் நாளை முதல் ஆரம்பம் ஆவதால் சந்திரயான்-2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிகிறது. உறை பனியில் விக்ரம் லேண்டரால் வேலை செய்ய முடியாது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டரை அனுப்பியது. ஆனால் தரையிறங்க சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இருக்கும் போது கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை விக்ரம் லேண்டர் இழந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை மீண்டும் தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சித்தனர்.

விக்ரம் லேண்டர் வேகமாக வந்து மோதி நிலவின் தரையில் விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அது சேதடைந்து இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நாசாவின் உதவியுடன் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எந்த பதிலையும் விக்ரம் லேண்டர் தரவில்லை.
.
இன்றுடன் நிலவில் 14 புவி பகல்கள் முடிகிறது. நாளை முதல் நிலவின் தென் பகுதியில் 14 நாள்கள் புவி இரவுகள் ஏற்பட்டும். அந்த சமயத்தில் நிலவில் உறை வெப்பநிலை மைனஸ் 240 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக மாறிவிடும். இத்தகைய அதீத குளிர் வெப்பநிலையில் எலக்ட்ரானிக் பொருட்களான லேண்டர் விக்ரம் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றால் வேலை செய்ய இயலாது. எனவே விக்ரமின் இயந்திர பாகங்கள் சேதமடைந்து, அதன் சோலார் திறன் இழக்கும். எனவே பிரக்யான் ரோவரும் வேலை செய்யாது. எனவே விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இதனால் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் விஞ்ஞானிகளின் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. எனினும் மனம் தளராத விஞ்ஞானிகள் ஆர்பிட்டரை வைத்து நிலவை ஆராய்ச்சி செய்யும் பணியில் இறங்கி உள்ளனர்.
வியாழக்கிழமை மாலை இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், சந்திரயான்-2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்கிறது. விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு இழந்தது எப்படி என தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறது என பதிவிட்டுள்ளது. இதன் மூலம் இன்றுடன் விக்ரம் லேண்டர் விடை பெறுவது உறுதியாகியுள்ளது. கூண்டுக்குள் வைக்கப்பட்ட பிரக்யானும் நாளை முதல் வேலை செய்யாது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications