ஆட்சி அமைத்தும் சிக்கல்.. அமைச்சரவையை தேர்வு செய்ய முடியாமல் திணறும் எடியூரப்பா.. நெருக்கடி!
கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தும் கூட இன்னும் அமைச்சரவையை தேர்வு செய்ய முடியாமல் முதல்வர் எடியூரப்பா திணறி வருகிறார்.
பெங்களூர்: கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தும் கூட இன்னும் அமைச்சரவையை தேர்வு செய்ய முடியாமல் முதல்வர் எடியூரப்பா திணறி வருகிறார்.
கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்த்ததை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.மஜத - காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் 17 பேர் ராஜினாமா கடிதம் அளித்ததால் ஆட்சி கவிழ்ந்தது.
திங்கள் அன்று வாரம் பெரும்பான்மையை நிரூபித்த எடியூரப்பா 105 எம்எல்ஏக்கள் பலத்துடன் ஆட்சி நடத்தி வருகிறார்.
ஆனால் என்ன
ஆனால் ஆட்சி அமைத்தும் கூட இன்னும் அமைச்சரவையை தேர்வு செய்ய முடியாமல் முதல்வர் எடியூரப்பா திணறி வருகிறார். முக்கிய உறுப்பினர்கள் எல்லோரும் அமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதனால் யாரை அமைச்சராக தேர்வு செய்வது என்று தெரியாமல் பாஜக தரப்பு கர்நாடகாவில் குழம்பி வருகிறது.
இல்லை
ஆட்சியில் அமர்ந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இன்னும் ஒரு அமைச்சர் கூட எடியூரப்பா ஆட்சியில் பதவி ஏற்கவில்லை. தற்போது வரை எடியூரப்பா மட்டுமே அவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். வேறு யாரும் பதவி ஏற்கவில்லை. இது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
என்ன காரணம்
தற்போது பாஜகவிற்கு கர்நாடகாவில் 105 எம்எல்ஏக்கள்தான் இருக்கிறார்கள். அங்கு பெரும்பான்மை பெற 104 எம்எல்ஏக்கள் தேவை. இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரும் உருவாக கூடாது என்பதால், பாஜக அரசு அமைச்சரவையை மிகவும் கவனமாக தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது. யாரும் விலகிவிடாத படி அமைச்சரவையை உருவாக்க பாஜக நினைத்து வருகிறது.
நெருக்கடி
ஆனால் பாஜக தேசிய தலைமை எடியூரப்பாவிற்கு உடனடியாக அமைச்சரவையை தேர்வு செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் அவர் கடும் அழுத்தத்தில் உள்ளார். அது மட்டுமில்லாமல் மஜத, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் எடியூரப்பாவிடம் அமைச்சரவை எங்கே என்று நெருக்கடி கொடுத்து வருகிறது.