ஆதாருடன் பான் கார்டை மார்ச் 31,2019 வரை இணைக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க அடுத்தாண்டு மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.
டெல்லி: ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட பயன்களும், நாட்டின் அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், கடந்த 2009ம் ஆண்டில் ஆதார் எண் திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் படிப்படியாக அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக்கணக்கையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வலியுறுத்தியது.

மத்திய நேரடி வரிகள் வாரியமும் (Central Board of Direct Taxes-CBDT), ஆதார் எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 2016-17ம் ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் அனைவரும் தங்களின் பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் அறிவுறித்தியது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த 2017-18ம் நிதியாண்டில் கொண்டு வந்த சட்ட திருத்தத்தின்படி, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்து, வரி ஏய்ப்பு செய்வதைத் தடுப்பது நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே, பான் எண் வைத்திருப்போர் அனைவரும், தங்கள் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும்" என்று மத்திய வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆதார் அட்டைக்கு சட்ட பூர்வமான அங்கீகாரம் உள்ளதா? என்பது தொடர்பான பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
முன்னதாக பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் 2017 ஜூலை 31 வரை வழங்கப்பட்டது. பின் அது ஆகஸ்ட் 31 வரையிலும் அதன் பின் டிசம்பர் 31 வரையிலும் தொடர்ந்து இந்தாண்டு மார்ச் 31 வரை என நான்கு முறை நீட்டிக்கப்பட்டிருந்தது. கடைசியாக 30-6-2018 வரை தேதி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில் தற்போது ஐந்தாவது முறையாக, அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி (31-3-2019) வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைக்க முட்டுக்கட்டையாக இருப்பது பெரும்பாலும், பான் எண் மற்றும் ஆதார் எண்ணில் இருக்கும் பிறந்த தேதிகளில் உள்ள வித்தியாசமே. இதன் காரணமாகவே பெரும்பாலானவர்கள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதில் கால தாமதம் செய்து வருகின்றனர். கூடவே, ஆதார் தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியாக பரபரப்பை உண்டாக்கி உள்ளதால், பெரும்பாலானவர்கள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதில் தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தனி நபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31ம் தேதியே கடைசி தேதி என்ற சூழலில், ஆதார் எண் மற்றும் பான் எண் இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications