'பிளிப்கார்ட்' ஊழியர்களில் 400 பேர் கோடீஸ்வரர்கள்!!!
பெங்களூர்: பிளிப்கார்ட் நிறுவன ஊழியர்கள் 400 பேர் 10 ஆண்டுகளுக்குள் கோடீஸ்வரர்களாகி உள்ளனர்.
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது. கடை, கடையாக ஏறி இறங்க மக்களுக்கு நேரமும், பொறுமையும் இல்லாதது தான் ஆன்லைன் வர்த்தகம் அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும்.
இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது.

பிளிப்கார்ட்
மக்கள் வீட்டில் இருந்து கொண்டு ஹாயாக பிளிப்கார்ட் மூலம் பொருட்களை வாங்கி குவிப்பதால் அந்நிறுவனத்தின் மதிப்பும், லாபமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

பங்குகள்
பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் 7 ஆயிரம் முழுநேர ஊழியர்களில் நான்கில் ஒரு பங்கு ஆட்களுக்கு அந்நிறுவன பங்குகள் வழங்கப்பட்டுள்ளன.

கோடீஸ்வரர்கள்
பிளிப்கார்ட் பங்குகளின் விலை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் பிளிப்கார்ட் பங்குகள் வைத்துள்ள ஊழியர்கள் 400 பேர் கோடீஸ்வரர்களாகி உள்ளனர். அந்நிறுவனத்தில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்குள் கோடீஸ்வரர்களாகி உள்ளனர்.

உயர் அதிகாரிகள்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்த உயர் அதிகாரிகள் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு மட்டும் குறைந்தது ரூ.6 கோடி ஆகும். அவர்கள் 2 ஆண்டுகளுக்குள் கோடீஸ்வரர்களாகி உள்ளனர்.

மிந்த்ரா.காம்
கடந்த மே மாதம் மிந்த்ரா.காம் நிறுவனத்தை பிளிப்கார்ட் வாங்கியது. அந்த நேரத்தில் நிறுவன பங்குகளை விற்க மிந்த்ரா தனது ஊழியர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications