வருமானவரி, ஆடிட்டர் ரிப்போர்ட் தாக்கல் செய்ய அக்.31 வரை கால அவகாசம்
வருமானவரி தாக்கல் செய்ய கடைசி தேதி அக்டோபர் 15 ஆம் தேதி என்றிருந்த நிலையில் மேலும் 15 நாட்கள் அதாவது அக்டோபர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: வருமானவரி தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் மேலும் 15 நாட்கள் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களும் வருமான வரி மற்றும் தணிக்கையாளர்களின் அறிக்கை (Auditors Report) போன்றவற்றை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
2017-18 நிதியாண்டிற்கான தனிநபர் மற்றும் மாத ஊதியம் பெறுவோரின் வருமான வரிக் கணக்கை, ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. பின்னர் காலவரையறை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தொழில்நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வருமான வரித் தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் மேலும் 15 நாட்கள் அதாவது அக்டோபர் 15 வரை காலக்கெடு அளிக்கப்பட்டது.
தொழில் நிறுவனங்களும் வருமான வரி மற்றும் தணிக்கையாளர்களின் அறிக்கை (Auditors Report) போன்றவற்றை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
2016-17ஆம் ஆண்டுக்கான வருமான வரித் தாக்கலுக்கான காலக்கெடு தேதியை வரும் செப்டம்பர் 30ம் தேதியில் இருந்து வரும் அக்டோபர் 31 வரை ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதால், அனைத்து தொழில் துறையினரும் ஜூலை மாதத்திற்கான கொள்முதல், விற்பனை மற்றம் நிகர வரிகளை செலுத்தவேண்டிய ஜிஎஸ்டிஆர்-3பி என்னும் படிவத்தை தாக்கல் செய்வதற்கான நெருக்கடியில் உள்ளனர். அனைத்து தொழில் நிறுவனங்களும், வரி ஆலோசகர்களும் தணிக்கையாளர்களும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கு கால நீட்டிப்பு கேட்டனர்.
இந்தநிலையில், 2017-18 நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அக்டோபர் 15ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக அக்டோபர் 31ஆம் தேதிவரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்தாதவர்களுக்கு ஏற்கனவே கூறியபடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications