கோல் இந்தியா பங்குகள் 6% திடீர் சரிவு.. ஆனா பிளாக் டீலில் Over-Subscription.. ஆடிப்போன மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

இந்தியப் பங்குச்சந்தையில் பொதுத்துறை நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் கோல் இந்தியா (Coal India) நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை வர்த்தகத்தில் 6 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்து முதலீட்டாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய அரசு இந்த பொதுத்துறை நிறுவனத்தில் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளில் சுமார் 2 சதவீதம் வரை பொதுச் சந்தையில் விற்பனை செய்ய (Offer For Sale - OFS) முடிவு செய்துள்ளதே இந்தத் திடீர் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். அரசின் இந்த பங்கு விற்பனைக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Coal India OFS 2026 Coal India share price drop 6 Coal India Offer for Sale Coal India oversubscription Coal India floor price 412 Government sells Coal India shares Coal India block deal Coal India retail investors May 29 Coal India strong coal reserves Coal India government stake sale OFS 412

பங்கு விற்பனைத் திட்டம்

இந்தத் Offer For Sale திட்டத்தின் கீழ் ஒரு பங்கின் குறைந்தபட்ச விலை (Floor Price) 412 ரூபாய் என அரசு நிர்ணயம் செய்துள்ளது. இது முந்தைய நாள் தேசிய பங்குச்சந்தையில் (NSE) வர்த்தகமாகி முடிந்த விலையான 458.15 ரூபாயை விட சுமார் 10 சதவீதம் குறைவான விலை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு தனது முதற்கட்ட திட்டத்தின்படி கோல் இந்தியா நிறுவனத்தின் மொத்தப் பங்குகளிலிருந்து 1 சதவீதத்தை அதாவது 6.16 கோடி பங்குகளை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாகத் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. மேலும், முதலீட்டாளர்களிடையே கூடுதல் வரவேற்பு இருந்தால், கூடுதலாக 1 சதவீத பங்குகளை (அதாவது மேலும் 6.16 கோடி பங்குகள்) விற்பனை செய்யும் உரிமையையும் (Oversubscription Option) அரசு தன் வசம் வைத்துள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 2 சதவீத ஈக்விட்டி பங்குகள் அல்லது 12.32 கோடி பங்குகள் வரை விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது. அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விலையின் அடிப்படையில் கணக்கிட்டால், இந்த ஒட்டுமொத்த பங்கு விற்பனையின் மதிப்பு 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களுக்கான கால அட்டவணை

இந்தச் சலுகை விலை பங்கு விற்பனையானது (OFS) சில்லறை அல்லாத பெரும் முதலீட்டாளர்களுக்கு (Non-Retail Investors) மே 27-ஆம் தேதியான புதன்கிழமை (இன்று) தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சாமானிய சில்லறை முதலீட்டாளர்கள் (Retail Investors), தகுதிவாய்ந்த ஊழியர்கள் மற்றும் முந்தைய ஏலத்தில் பங்குகள் கிடைக்காத பெரும் முதலீட்டாளர்கள் ஆகியோர் மே 29-ஆம் தேதி அன்று இந்த ஏலத்தில் பங்கேற்றுப் பங்குகளை வாங்க விண்ணப்பிக்கலாம்.

இடையில் மே 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியப் பங்குச்சந்தைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் வர்த்தகம் எதுவும் நடைபெறாது என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அசுர வேகத்தில் குவிந்த ஏலங்கள் (Over-Subscription)

பெரும் முதலீட்டாளர்களுக்காக இன்று ஒதுக்கப்பட்டுள்ள 5.54 கோடி பங்குகளுக்குப் போட்டியாக, ஏலம் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளேயே விற்பனை செய்யப்படும் பங்கு மதிப்பை விடவும் சுமார் 5 மடங்கு கூடுதல் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. முதலீட்டாளர்கள் தரப்பில் இருந்து 27.39 கோடிக்கும் அதிகமான பங்குகளுக்கு ஏலம் கோரப்பட்டுள்ளது என அவுட்லுக் பிஸ்னஸ் தெரிவித்துள்ளது.

அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலையான 412 ரூபாயை விடக் கூடுதலாக, சராசரியாக 414.57 ரூபாய் என்ற இண்டிகேட்டிவ் விலையில் (Indicative Price) இந்த ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் கோல் இந்தியா பங்குகளுக்கு இருக்கும் அசுரத் டிமாண்ட் உறுதியாகியுள்ளது என்றும் அவுட்லுக் பிஸ்னஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

பங்கு விலை

காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் கோல் இந்தியா பங்குகள் 6 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களைக் கவலையடையச் செய்தன. எனினும், கடந்த 5 மணி நேர வர்த்தக நகர்வுகளின்படி, பிற்பகல் நிலவரப்படி பங்குகளின் விலை ஓரளவிற்கு மீண்டு ரூ.428.40 முதல் ரூ. 430 வரை என்ற நிலையான வரம்பில் வர்த்தகமாகி வருகிறது.

சந்தை வல்லுநர்கள் கூறுகையில், இந்த 6% சரிவு என்பது நிறுவனத்தின் பலவீனத்தால் ஏற்பட்ட வீழ்ச்சி அல்ல, மாறாக அரசு 10% தள்ளுபடி விலையில் பங்குகளை விற்க முன்வந்ததால் ஏற்பட்ட தற்காலிக 'சப்ளை ஈவென்ட்' (Supply Event) மட்டுமே ஆகும்.

கோடைக்கால மின் தேவை

பங்கு விற்பனை ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கோல் இந்தியா நிறுவனம் பங்குச்சந்தைகளுக்கு இன்று காலை ஒரு முக்கியமான உத்தியோகபூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. இந்த கோடைகாலத்தின் உச்சகட்ட மின்சாரத் தேவையைச் சமாளிக்கும் வகையில், நிறுவனத்திடம் தற்போது 168 மில்லியன் டன் (MT) நிலக்கரி இருப்பு (Coal Buffer) தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 113.5 மில்லியன் டன் நிலக்கரி நிறுவனத்தின் சொந்த சுரங்க முகப்புகளிலேயே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும். இந்த வலுவான உள்கட்டமைப்பு மற்றும் நிதி நிலைத்தன்மையே முதலீட்டாளர்கள் ஏலத்தைக் குவித்து வருவதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

முழுமையாக தயாரான மத்திய அரசு

கடந்த 2026 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, கோல் இந்தியா பொதுத்துறை நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 63 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் சொந்தமாக வைத்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்த விற்பனை நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) வழிகாட்டுதல்களின்படி முறைப்படி நடத்தப்படுகின்றன.

இதற்காக மும்பை பங்குச்சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE) ஆகியவற்றில் இதற்கெனத் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்புச் சாளர வழிமுறை (Separate Window Mechanism) மூலமாகப் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பங்குச்சந்தையில் பிளாக் டீல்

அரசு பங்குகளைக் குறைந்த விலைக்கு விற்க முன்வந்ததன் எதிரொலியாக, புதன்கிழமை காலையிலேயே பங்குச்சந்தையில் பெரும் மதிப்பில் வர்த்தகங்கள் பதிவாகின. வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே கோல் இந்தியா நிறுவனத்தின் சுமார் 5 லட்சம் பங்குகள் 'பிளாக் டீல்' (Block Deal) எனப்படும் பெருமளவிலான நேரடிப் பரிமாற்ற முறையில் கைமாறியுள்ளன.

அரசின் இந்தத் திடீர் மூலோபாயப் பங்கு விற்பனை அறிவிப்பால் சந்தையில் தற்காலிகமாகப் பங்குகளின் விலை சரிந்திருந்தாலும், நீண்ட கால முதலீட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு இது ஒரு குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.oneindia.com அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+