உசந்து நிக்கும் உளுந்து... கழுத்தை நெரிக்கும் துவரம் பருப்பு - ராக்கெட் வேகத்தில் விலை உயர்வு!
சென்னை: தமிழகத்தில் விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக உளுந்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பு விலை தொடர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. எனினும், எண்ணெய் வகைகளின் விலை குறைந்துள்ளது சற்றே ஆறுதல் அளிக்கின்றது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத்தலைவர் எஸ்.பி. சொரூபன், "புரட்டாசி மாதம் தொடங்கியதை தொடர்ந்து காய்கறிகள் மீதான தேவை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில் வடமாநிலத்தில் விளைச்சல் மற்றும் வரத்து குறைந்ததின் காரணமாக பருப்பு வகைகளின் தேவை தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. மேலும் ஆன் லைன் வர்த்தகம் காரணமாகவும் பருப்பு வகைகள் தேவை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதனால் கென்யா, தான்சானியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருப்பு வகைகள் இறக்குமதி குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் ரூபாய் 12 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை உளுந்தம் பருப்பு தற்போது ரூபாய் 13 ஆயிரத்து 200 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூபாய் 13,500 க்கு விற்பனை செய்யப்பட்ட துவரம்பருப்பு ரூபய்14,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 ஆம் தர துவரம்பருப்பு ரூபாய் 12 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 13 ஆயிரத்துக்கும், தான்சானியா துவரம்பருப்பு ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 11 ஆயிரமாகவும் விலை அதிகரித்துள்ளது.
அதேவேளையில் இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரத்து அதிகரித்ததின் விளைவாகவும், உள்நாட்டு தயாரிப்பு விகிதம் உயர்ந்துள்ளதாலும் எண்ணெய் வகைகளின் விலை குறைந்துள்ளது. அதன்படி, ரூபாய் 220 ஆக இருந்த ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ரூபாய் 185 க்கும், காங்கேயம், பொள்ளாச்சியில் இருந்து இறக்குமதியாகும் நல்லெண்ணெய் ரூபாய் 180 இல் இருந்து ரூபாய்150 க்கும், விளக்கெண்ணை ரூபாய் 100 இல் இருந்து ரூபாய் 75க்கும் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூபாய் 200 இல் இருந்து ரூபாய் 170க்கும், 2 ஆம் தரம் ரூபாய் 180 இல் இருந்து ரூபாய் 150க்கும், வனஸ்பதி ரூபாய் 90 இல் இருந்து ரூபாய் 80க்கும் விலை குறைந்து உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications