இன்னும் இரு ஆண்டுகளில் 8 சதவீத வளர்ச்சியை எட்டிவிடுவோம் - மான்டேக்சிங் அலுவாலியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அடுத்த இரு ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சியை எட்டிவிடும் என மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் நேற்று 34-வது ஸ்கோச் (SKOCH) மாநாடு நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8 சதவீதத்தை எட்டும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "12-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தின் முதல் ஆண்டில் 5 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த இலக்கு 8 சதவீதமாகும்.

Economy to grow at 8% in 2 years, says Montek Singh Ahluwalia

முதலில் குறைவாக இருந்தாலும்...

திட்டக்குழுவின் கணிப்புப்படி 12-வது திட்ட காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். இருப்பினும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்த கணிப்பைத் அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் திட்டக்குழு வெளியிடும்.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சி விகிதம் மேம்படும் என நம்புகிறோம். முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாவது பாதியில் பொருளாதார வளர்ச்சி மேம்படும்போது ஒட்டுமொத்தமாக வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டும்," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+