அத்தியாவசிய மருந்துகளுக்கு ஆகஸ்ட் வரை ஜிஎஸ்டி வரி இல்லை
அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு ஆகஸ்ட் மாதம் வரை ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி: அத்தியாவசிய மருந்துகளின் விலை ஆகஸ்ட் மாதம் வரை உயர்த்தப்படாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கொண்டு வரப்படுவதற்கு முன்பு இருந்த விலையிலேயே மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என மருந்து விற்பனை துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் 5%, 12%, 18%, 28% என்னும் நான்கு விகிதங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 0% என்னும் வரி விகிதத்தின் கீழ், உணவுப் பொருட்கள், கல்வி, மற்றும் மருத்துவ சேவைகளுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மருந்துகளுக்கு ஜிஎஸ்டி
ஜிஎஸ்டியில் இன்சுலின் மற்றும் அவசர சிகிச்சைக்காக மருந்துவ உபகரணங்களுக்கு 5 சதவீதம் வரியும்,அத்தியாவசிய மருந்துகளுக்கு 12 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் அமல்
ஜிஎஸ்டி வரி முறை ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன் விளைவாக பல்வேறு பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது சில பொருட்கள் விலை குறைந்துள்ளது , பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

மறுபரிசீலனை செய்யப்படுமா?
இந்த வரி விகிதங்கள் நான்காக பிரிக்கப்பட்டதற்கு, பல்வேறு விமர்சனங்களும், புகார்களும் எழுந்தன. வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்யக்கோரியும் பலதரப்புகளில் இருந்தும் குரல் எழுப்பப்பட்டது.

ஆகஸ்ட் வரை பழைய விலை
இதனிடையே ஆகஸ்ட் மாதம் வரை, ஜிஎஸ்டி கொண்டு வரப்படுவதற்கு முன்பு இருந்த விலையிலேயே மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என மருந்து விற்பனை துறையினர் தெரிவித்துள்ளனர்.

பழைய சரக்குகள்
மருந்து கடை விற்பனையாளர்கள் வாங்கி வைத்துள்ள அத்தியாவசிய மருந்துகளை பழைய விலையிலேயே விற்கலாம் என்றும் வாங்கி வைத்த சரக்குகள் விற்று தீர்ந்த உடன், வாங்கும் புதிய சரக்குகளை ஜிஎஸ்டி,வரியுடன் விற்பனை செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications