ஜிஎஸ்டி: ஜூலை மாத வரி வசூல் ரூ. 96,483 கோடி - ரூ.3,026 கோடி வரி ஏய்ப்பு

நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் 96 ஆயிரத்து 483 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் 96 ஆயிரத்து 483 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வாயிலாக ஜூலை மாதத்துக்கான அரசின் வரி வசூல் அதிகரித்துள்ள நிலையில், ஜிஎஸ்டியில் ரூ.3,026 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஜூன் மாதம் வசூலான ஜிஎஸ்டியை காட்டிலும் ஜூலை மாதம் 2467 கோடி ரூபாய் கூடுதலாக 96 ஆயிரத்து 483 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

Government collects Rs 96,483 crore GST for July

ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கலான மொத்த எண்ணிக்கை 66 லட்சமாக உள்ளது. ஏப்ரல், மே மாதங்ககளுக்கான இழப்பீடாக மாநில அரசுகளுக்கு 3 ஆயிரத்து 899 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய ஜிஎஸ்டியாக ரூ.15,877 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.22,293 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.49,951 கோடியும், செஸ் வரியாக ரூ.8,362 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.96,483 கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. இறக்குமதிக்காக ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் ரூ.24,852 கோடியும், செஸ் வரியில் ரூ.794 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துக்கான வரித் தாக்கலில், மொத்தம் 66 லட்சம் ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 64.69 லட்சமாகவும், ஏப்ரல் மாதத்தில் 62.46 லட்சமாகவும் இருந்தது. மாநில அரசுகளுக்கான இழப்பீட்டுத் தொகையைப் பொறுத்தவரையில், ஏப்ரல் முதல் மே வரையில் மொத்தம் ரூ.3,899 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான ஷிவ் பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், "2017 ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதிலிருந்து 2018 ஜூன் மாதம் வரையில் மொத்தம் 1,205 வரி ஏய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.3,026 கோடியாகும். மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 487 வழக்குகளில் மொத்தம் ரூ.1,320 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஜிஎஸ்டி வாயிலாக அரசு ரூ.96,483 கோடியை வசூலித்திருந்த நிலையில், மறுபுறம் அதிகளவில் வரி ஏய்ப்பும் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அரசால் வசூலிக்கப்பட்டுள்ள மொத்த வரியில் ரூ.500 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட தொழில் நிறுவனங்களின் பங்கு மட்டும் 79.5 சதவிகிதமாக இருப்பதாக ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+