ஜிஎஸ்டி: ஜூலை மாத வரி வசூல் ரூ. 96,483 கோடி - ரூ.3,026 கோடி வரி ஏய்ப்பு
நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் 96 ஆயிரத்து 483 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி: நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் 96 ஆயிரத்து 483 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வாயிலாக ஜூலை மாதத்துக்கான அரசின் வரி வசூல் அதிகரித்துள்ள நிலையில், ஜிஎஸ்டியில் ரூ.3,026 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஜூன் மாதம் வசூலான ஜிஎஸ்டியை காட்டிலும் ஜூலை மாதம் 2467 கோடி ரூபாய் கூடுதலாக 96 ஆயிரத்து 483 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கலான மொத்த எண்ணிக்கை 66 லட்சமாக உள்ளது. ஏப்ரல், மே மாதங்ககளுக்கான இழப்பீடாக மாநில அரசுகளுக்கு 3 ஆயிரத்து 899 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய ஜிஎஸ்டியாக ரூ.15,877 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.22,293 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.49,951 கோடியும், செஸ் வரியாக ரூ.8,362 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.96,483 கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. இறக்குமதிக்காக ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் ரூ.24,852 கோடியும், செஸ் வரியில் ரூ.794 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்துக்கான வரித் தாக்கலில், மொத்தம் 66 லட்சம் ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 64.69 லட்சமாகவும், ஏப்ரல் மாதத்தில் 62.46 லட்சமாகவும் இருந்தது. மாநில அரசுகளுக்கான இழப்பீட்டுத் தொகையைப் பொறுத்தவரையில், ஏப்ரல் முதல் மே வரையில் மொத்தம் ரூ.3,899 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான ஷிவ் பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், "2017 ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதிலிருந்து 2018 ஜூன் மாதம் வரையில் மொத்தம் 1,205 வரி ஏய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.3,026 கோடியாகும். மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 487 வழக்குகளில் மொத்தம் ரூ.1,320 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஜிஎஸ்டி வாயிலாக அரசு ரூ.96,483 கோடியை வசூலித்திருந்த நிலையில், மறுபுறம் அதிகளவில் வரி ஏய்ப்பும் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அரசால் வசூலிக்கப்பட்டுள்ள மொத்த வரியில் ரூ.500 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட தொழில் நிறுவனங்களின் பங்கு மட்டும் 79.5 சதவிகிதமாக இருப்பதாக ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications