எச்டிஎஃப்சி மற்றும் எஸ் பேங்க்கில் சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைப்பு
எச்டிஎஃப்சி வங்கியும் எஸ் வங்கியும் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கு முடிவெடுத்துள்ளன.
மும்பை: சேமிப்பு வங்கிக்கணக்கிற்கு வட்டியை குறைப்பதில் எஸ்பிஐ வங்கிக்கு அடுத்து தற்போது எச்டிஎஃபி மற்றும் வெளிநாட்டு வங்கியான எஸ் பேங்க்கும் வட்டி விகிதத்தை அதிரடியாகக் குறைத்துள்ளது வாடிக்கையாளர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு பணவீக்க விகித அளவானது 2 சதவிதத்திற்கும் கீழே இறங்கியதால், மத்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகித்தை 0.50 புள்ளிகள் குறைக்கும் என்று பெரும்பாலானவர்களும் பொருளாதார வல்லுநர்களும் எதிர்பார்த்த நிலையில் வட்டி விகிதத்தை 0.25 புள்ளிகள் மட்டுமே குறைத்தது.
இதனை முன்கூட்டியே உணர்ந்தே என்னவோ, பாரத ஸ்டேட் வங்கியானது வாடிக்கையாளர்களின் சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு அளிக்கும் வட்டி விகிதத்தை 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக குறைத்துவிட்டது.
மத்திய ரிசர்வ் வங்கியும் வேறு வழி இல்லாமல் வங்கிகளுக்கு தரவேண்டிய வட்டி விகிதத்தை குறைத்து விட்டது.

வட்டி விகிதம் குறைப்பு
இதன் பின்னர், மற்றொரு பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவும் ஆக்ஸிஸ் வங்கியும் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கு வழங்கும் வட்டி விகிதத்தை 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக குறைத்தது.

வாடிக்கையாளர்கள் கவலை
அதாவது 50 லட்சம் வரையிலும் இருப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 0.50 சதவிகிதத்தை குறைத்து 3.50 சதவிகிதமாகவும் 50 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அதே 4 சதவிகிதமாகவே தொடரும் என்று அறிவித்தது.

பஞ்சாப் நேசனல் வங்கி
அதுபோலவே, மற்றொரு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் தனது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. 50 லட்சத்திற்கும் குறைவாக இருப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வட்டியையும் 4 சதவிகிதத்தில் இருந்து 3.5 சதவிகிதமாக குறைத்துள்ளது.

தனியார் வங்கிகளும் வட்டி குறைப்பு
தற்போது தனியார் துறை வங்கிகளும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை குறைப்பதற்கு வரிசை கட்டி நிற்கின்றன. அதற்கு முன்னோட்டமாக எச்டிஎஃப்சி வங்கியும் எஸ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைப்பதற்கு முடிவெடுத்துள்ளன.

எச்டிஎஃப்சி வங்கி
எச்டிஎஃப்சி வங்கி தனது வங்கியில் 50 லட்சம் வரையில் சேமிப்புக் கணக்கில் இருப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 3.50 சதவிகிதம் மட்டுமே வட்டி அளிக்க முடிவெடுத்துள்ளது. இதற்கு முன்பு 4 சதவிகிதம் வரையில் வட்டி அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், 50 லட்சத்திற்கும் மேல் இருப்பு வைத்துள்ளவர்களுக்கு அதே 4 சதவிகிதம் வட்டி விகிதமே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

ஆகஸ்ட் 19 முதல் அமல்
இந்த வட்டி விகிதமானது இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் பொருந்தும் . இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் ஆகஸ்டு 19ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

எஸ் வங்கி குறைப்பு
அதுபோலவே, எஸ் வங்கியும் தனது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் 1 லட்சம் வரையிலும் இருப்பு வைத்துள்ளவர்களுக்கு 6 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. மேலும் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிலையான இருப்பு(Fixed Deposits) வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 6.50 சதவிகித்திலிருந்து 6.25 சதவிகிதமாகவும் குறைத்துள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications