பினாமி சொத்து, கருப்பு பணம் பற்றி தகவல் கொடுப்பவர்களை கோடீஸ்வரர்களாக்கும் மத்திய அரசு
பினாமி சொத்து குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லி: உள்நாட்டில் பினாமி பெயரில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை மற்றும் சொத்துக்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படும் எனவும் வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் வரையில் பரிசு வழங்கப்படும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வரவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருமான வரித்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் பங்களிப்பை பெறுவதற்கு வகை செய்யும் விதத்தில் புதிய பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் பினாமி பெயரில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை மற்றும் சொத்துக்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படும். வருமான வரி செலுத்தாதவர்கள் தொடர்பான தகவல்களை தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை வெகுமதி அளிக்கப்படும்.
இதேபோல், வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் வரையில் பரிசு வழங்கப்படும் என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு பணம் ஒழிப்பு மற்றும் வருமான வரி ஏய்ப்பை தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டத்தின் மூலமாக பினாமி சொத்து மற்றும் பரிவர்த்தனை குறித்து தகவல் கூறலாம். தகவல் தெரிவிப்பவர்கள் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். வெளிநாட்டினரும் இந்த தகவல்களை தெரிவிக்கலாம்.
இந்த திட்டம் என்பது பினாமி சொத்து, பரிமாற்றம் குறித்து தகவல் அளிப்பவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும்,கறுப்பு பணம், பினாமி சொத்துக்களை கட்டுப்படுத்துவதற்காகவும்தான் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications