பினாமி சொத்து, கருப்பு பணம் பற்றி தகவல் கொடுப்பவர்களை கோடீஸ்வரர்களாக்கும் மத்திய அரசு
பினாமி சொத்து குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லி: உள்நாட்டில் பினாமி பெயரில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை மற்றும் சொத்துக்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படும் எனவும் வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் வரையில் பரிசு வழங்கப்படும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வரவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருமான வரித்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் பங்களிப்பை பெறுவதற்கு வகை செய்யும் விதத்தில் புதிய பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் பினாமி பெயரில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை மற்றும் சொத்துக்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படும். வருமான வரி செலுத்தாதவர்கள் தொடர்பான தகவல்களை தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை வெகுமதி அளிக்கப்படும்.
இதேபோல், வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் வரையில் பரிசு வழங்கப்படும் என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு பணம் ஒழிப்பு மற்றும் வருமான வரி ஏய்ப்பை தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டத்தின் மூலமாக பினாமி சொத்து மற்றும் பரிவர்த்தனை குறித்து தகவல் கூறலாம். தகவல் தெரிவிப்பவர்கள் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். வெளிநாட்டினரும் இந்த தகவல்களை தெரிவிக்கலாம்.
இந்த திட்டம் என்பது பினாமி சொத்து, பரிமாற்றம் குறித்து தகவல் அளிப்பவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும்,கறுப்பு பணம், பினாமி சொத்துக்களை கட்டுப்படுத்துவதற்காகவும்தான் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications