இன்போசிஸ் முன்னாள் தலைவர்கள் சிபுலால், கோபாலகிருஷ்ணன் இணைந்து புதிய நிறுவனம் தொடக்கம்!
பெங்களூர்: ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களான எஸ்.டி.சிபுலால், கோபால கிருஷ்ணன் ஆகியோர் "ஆக்ஸிலோர் வெஞ்சர்ஸ்" (Axilor Ventures) எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களான எஸ்.டி.சிபுலால், கோபால கிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

தொழில் முனைவோர், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை அளிப்பதற்காக ஆக்ஸிலோர் வெஞ்சர்ஸ் (Axilor Ventures) தொடங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை தொழிலாக மாற்றுவதற்குரிய முதலீடுகளை ஈர்ப்பது இந்நிறுவனத்தின் பிரதான பணியா.
சுகாதாரம், மருத்துவம் ஆகிய துறைகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கு உதவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இருவரும் தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் முன்னாள் இன்போசிஸ் போர்டு உறுப்பினர் ஸ்ரீநாத் பத்னி, ஹார்வார்டு பேராசிரியர் ஜார்ஜ் பாவ்லோ லெமான், இன்போசிஸ் நிறுவனத்தின் திட்டமிடல் துறை முன்னாள் தலைவர் கணபதி வேணுகோபால் ஆகியோரும் இணைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications