ரயில் பயணிகளுக்கு நவராத்திரி விரத சாப்பாடு - ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்
இந்த நவராத்திரி காலத்தில் விரதம் மேற்கொள்பவர்கள் பயணம் செய்யும்போதும் விரதத்தை கடைபிடிக்க ஏதுவாக நவராத்திரி ஸ்பெஷல் உணவை வழங்க ஏர்பாடு செய்துள்ளது ஐஆர்சிடிசி.
சென்னை: நவராத்திரி விரதத்தை வட இந்தியாவில் அனைவரும் சிறப்பாக கடைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த நவராத்திரி காலத்தில் விரதம் மேற்கொள்பவர்கள் பயணம் செய்யும்போதும் விரதத்தை கடைபிடிக்க ஏதுவாக நவராத்திரி ஸ்பெஷல் உணவை வழங்க ஏர்பாடு செய்துள்ளது ஐஆர்சிடிசி.
நவராத்திரி தாளி, சபூதனா கிச்சடி, லஸ்ஸி, பழ சலட் ஆகிய உணவுகளையும் www.ecatering.irctc.co.in அல்லது Food-on-track ஆப் மூலம் ஆர்டர் செய்யலாம்.

நவராத்திரி பண்டிகையின் போது அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் விருந்து தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் ஒரு டம்ளரில் வெந்நீர் மட்டுமே குடித்துவிட்டு வந்தார். அவர் அப்போது நவராத்திரி விரதம் மேற்கொண்டிருந்தார். இதே போல பலரும் நவராத்திரி பண்டிகையின் போது வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். ரயில் பயணிக்களுக்காக 'vrat ka khana'என்ற பெயரில் நவராத்திரி விரத உணவை ஐஆர்சிடிசி வழங்குகிறது.
இந்த சிறப்பு விருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் மட்டும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாக்பூர், அம்பாலா, ஜெய்ப்பூர், இடார்சி, ஜான்சி, நாசிக், ராட்லாம், தவுந்த், மதுரா, நிஜாமுதீன், லக்னோ ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர நவராத்திரி தாளி, சபூதனா கிச்சடி, லஸ்ஸி, பழ சலட் ஆகியனவற்றை www.ecatering.irctc.co.in அல்லது Food-on-track ஆப் மூலம் ஆர்டர் செய்யலாம்.
ஆர்டர் செய்யும்போது பிஎன் ஆர் நம்பரைக் குறிப்பிட வேண்டும். ஆனால், 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே ஆர்டரை கொடுத்துவிட வேண்டும். உணவு கிடைத்தவுடன் கூட பணத்தை வழங்கலாம். நவராத்திரி பண்டிகை கால உணவு ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications