கலால் வரியை ரத்து செய்யும் போராட்டம் - மார்ச் 7 வரை தொடர நகைக்கடை உரிமையாளர்கள் முடிவு
டெல்லி: மத்தியில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் நடைமுறைகளில் வெளியான கலால் வரி குறித்த அறிவிப்பினை ரத்து செய்ய கோரிய போராட்டம் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி வரையில் தொடரும் என்று நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்க நகைகளின் விலை, பவுனுக்கு ரூபாய் 300 உயர வாய்ப்புள்ளது.

இதேபோல் ரூபாய் 2 லட்சத்துக்கும் மேல் நகை வாங்குவோருக்கு ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதிருப்தி ஏற்படுத்திய அறிவிப்பு
இதனால் ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குவோருக்கு ரூபாய் 2 ஆயிரம் கூடுதல் செலவாகும். மத்திய அரசின் இந்த அறிவிப்பு நகைக் கடை உரிமையாளர்களுக்கும், நகை வாங்குவோருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
7 ஆம் தேதி வரை தொடரும்
தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் நகைக் கடை உரிமையாளர்கள் கடந்த மார்ச் 2 ஆம் தேதி போராட்டத்தை தொடங்கினர். கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் தங்களது போராட்டத்தை மார்ச் 7 ஆம் தேதி வரை தொடர நகைக் கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கோரிக்கைகள் வலியுறுத்தல்
இதனிடையே அனைத்து அகில இந்திய ரத்தினங்கள் மற்றும் ஜூவல்லரி கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வர்த்தகம் பாதிப்பு
கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தினால் கிட்டதட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா












Click it and Unblock the Notifications