For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சம்பள உயர்வு கோரி ஜன 7-ம்தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: சம்பள உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் வருகிற 7-ந்தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதுபற்றி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அமைப்பாளர் விஸ்வாஸ் உதாகி, மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், "நாங்கள் வங்கிகளின் ஒட்டுமொத்த லாபத்துக்கு ஏற்ப ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதன்படி, 23 சதவீத ஊதிய உயர்வு கேட்டு வருகிறோம்.

Nationwide bank strike on January 7

ஆனால், வங்கிகளின் நிர்வாக அமைப்பாள இந்திய வங்கிகள் சங்கம், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முன்வருகிறது. இந்த ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை விரைவில் முடிக்க வேண்டும். அதை வலியுறுத்தி, 7-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்," என்றார்.

7-ந்தேதி வேலை நிறுத்தத்துக்கு பிறகும், ஊதிய உயர்வு அளிக்கப்படாவிட்டால், 21-ந்தேதி முதல் 24-ந்தேதிவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

அதன்பிறகு, மார்ச் 16-ந்தேதியில் இருந்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் திட்டமிட்டுள்ளனர்.

English summary
Bank employees’ unions have decided go on a strike on January 7 across the country to press for a wage hike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X