ஜிஎஸ்டியில் 12 லட்சம் நிறுவனங்கள் பதிவு - ஹஷ்முக் ஆதியா
சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பின் கீழ் இதுவரை 12 லட்சம் வணிக நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையில் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் துறையினர் மற்றும் வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளது, தாங்கள் முழுமையாக ஜிஎஸ்டி வரிமுறையை ஏற்றுக் கொண்டனர் என்பது தெளிவாகிறது என்று வருவாய் துறை செயலாளர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையானது கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தங்களின் வர்த்தக நடைமுறைகளையும் கணக்கு வழக்குகளையும் ஜிஎஸ்டி வரிமுறைக்கு ஏற்றவாரு மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர்.
ஜிஎஸ்டி விதி முறையின் படி ஜிஎஸ்டி வரிவரம்பிற்குள் வரும் அனைத்து வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் ஜிஎஸ்டியில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் ஆண்டு வருவாய் 20 லட்சத்திற்குள் வரும் பட்சத்தில் ஜிஎஸ்டியில் பதிவு செய்யத் தேவையில்லை. ஆனால், அதே சமயத்தில் தாங்களே ஜிஎஸ்டியில் தங்களை பதிவு செய்துகொள்ளவும் முடியும். ஏனென்றால். ஜிஎஸ்டியில் பதிவு செய்தால் மட்டுமே வர்த்தகர்களும் தொழில் துறையினரும் கொள்முதல் உள்ளீட்டு வரி பயன்பாட்டை முழுமையாக பெற முடியும்.

சரக்கு மற்றும் சேவை வரி
ஜிஎஸ்டியில் பதிவு செய்தால் மட்டுமே வர்த்தகர்களும் தொழில் துறையினரும் தங்களின் கொள்முதல் உள்ளீட்டு வரி (Input Tax Credit) பயன்பாட்டை முழுமையாக பெற முடியும். ஏன் என்றால் உள்ளீட்டு வரி பயன்பாடு என்பது ஒரு சங்கிலித் தொடர் பயன்பாடு ஆகும், எனவே அனைத்து தொழில் துறையினரும் வர்த்தகர்களும் ஜிஎஸ்டியில் பதிவு செய்வது கட்டாயமாகும்.

ஜூலை 30 கடைசி தேதி
இதுவரையிலும் வாட் வரி விதிப்பு முறையில் இருந்து ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு மாற்றம் செய்யாதவர்களும் தங்களின் நிறுவனங்களை ஜிஎஸ்டியில் பதிவு செய்வதற்கு தங்களின் வரி ஆலோசகர்களின் மூலம் தீவிர முனைப்பு காட்டிவருகின்றனர். இதனை உணர்ந்தே மத்திய அரசும் ஜிஎஸ்டியில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டித்தது.
|
ஜிஎஸ்டியில் விண்ணப்பம்
சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் சுமார் 10 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்ட்டு வருகின்றன என்று வருவாய் துறை செயலாளர் ஹாஷ்முக் ஆதியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மொத்தம் 10 லட்சம் விண்ணப்பங்களுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 லட்சம் விண்ணப்பங்கள் ஒப்புதலுக்காக பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு
ஆண்டு பரிவர்த்தனை ரூ.20 லட்சத்துக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்புக்குள் வணிக நிறுவனங்கள் பதிவு செய்வதும் கட்டாயமல்ல. இருந்தாலும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்தால் மட்டுமே உள்ளீட்டு வரி வரவு கிடைக்கும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications