முடங்கிய தபால் துறை... அவதிப்படும் பொது மக்கள்

7வது ஊதிய குழுவை 2014ம் ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்த வேண்டும். 50 சதவீதம் பஞ்சப்படியை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தனியார் மயமாக்கும் திட்டத்தையும், ஆட்குறைப்பு செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ஊழியர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெறி்ச்சோடின. இதனால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தபால் நிலையங்களில் கடித போக்குவரத்து முற்றிலும் முடங்கி கிடக்கின்றன. இதனால் தபால்கள் மலை போல குவிய தொடங்கியுள்ளன. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த போராட்டத்தில் 2300 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். தபால் அலுவலக சங்க தலைவர் மைக்கேல் ராஜ் தலைமையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் வலுவடைந்து வருவதால் பொதுமக்களுக்கு வரவேண்டிய முக்கிய கடிதங்கள், பாலிசி விபரங்கள், சேமிப்பு கணக்குகள், வேலை வாய்புக்கான உத்தரவுகள், மற்றும் அவற்றுக்கு தபால் நிலையங்கள் மூலம் செலுத்த வேண்டிய கட்டணங்கள் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் அடியோடு முடங்கியுள்ளன.
இதனால் பொதுமக்கள் திகைப்பில் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வங்கிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தின. இதனால் வங்கி பணிகள் அடியோடு முடங்கி ஏடிஎம்மில் கூட பணம் எடுக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications