பணத்தட்டுப்பாடு: வீடு, கார், பயிர் கடன் செலுத்த மொத்தம் 90 நாட்கள் அவகாசம்
பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் கடந்த 50 நாட்களாக மக்கள் தடுமாறி வருகின்றனர். வங்கிகளில் கடன் தவணையை செலுத்த கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் டெபாசிட் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டது.
புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் வங்கிகள், ஏடிஎம்களில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடன் தவணை செலுத்த அவகாசம்
பண தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, நவம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதிக்குள் கடன் தவணை செலுத்துபவர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. விவசாய கடன்களுக்கும் 60 நாள் அவகாசம் தரப்பட்டது. இந்த நிலையில் மேலும் 30 நாள் அவகாசம் வழங்குமாறு ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
தவணை தொகை
வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் கடன் வாங்கியவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும். தவிர நவம்பர் 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான தவணைத் தொகைக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும் எனவும் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன், ஓவர் டிராப்ட் உள்ளிட்ட வைக்கும் இது பொருந்தும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
கூடுதல் நடைமுறை மூலதனம்
இதனிடையே நடுத்தர, சிறு, குறுந்தொழில்களுக்கு கூடுதல் நடைமுறை மூலதனம் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடைமுறை மூலதன வரம்பை உயர்த்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications