ரெப்போ ரேட் .25% அதிகரிப்பு- ரிசர்வ் வங்கி! பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி!!
Subscribe to Oneindia Tamil

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்ற பிறகு இன்று நிதிக் கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டியை (ரெப்போ ரேட்) .25% சதவீதம் அதிகரித்து அறிவிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பொது மக்கள் பெறும் வீடு மற்றும் கார் கடன்களுக்கான வட்டி மேலும் அதிகரிக்கும்.
தொழில் வளர்ச்சி அதிகரிக்க வைக்கும் நடவடிக்கையாக வட்டி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வட்டி விகிதம் அதிகரித்ததால் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியான நிலையில் மும்பை பங்குச் சந்தை 500 புள்ளிகள் சரிந்தது.












Click it and Unblock the Notifications