டிஜிட்டல் தங்கம் வேண்டவே வேண்டாம்.. 10 பைசா கூட வராது! செபி எச்சரிக்கைக்கு என்ன காரணம்! பகீர் தகவல்
சென்னை: இந்தியர்கள் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதற்கிடையே டிஜிட்டல் தங்கம் தொடர்பாகச் செபி கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது. செபி அப்படியொரு எச்சரிக்கை வெளியிட என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியர்கள் எப்போதும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். இப்போது தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டதால் அதை வாங்கவே பெரும் தொகை தேவைப்படுகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள், இப்போது டிஜிட்டல் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். ஏகப்பட்ட நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் தங்கத்தை விளம்பரப்படுத்துகிறார்கள்.

செபி எச்சரிக்கை
ரூ.50 என்ற சிறிய தொகையில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.. திருட்டு போகுமோ என்ற அச்சம் தேவையில்லை உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் இந்த டிஜிட்டல் தங்கத்தில் ஆர்வமாக முதலீடு செய்கிறார்கள். இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டல் தங்கம் தொடர்பாகச் செபி மிக முக்கிய வார்னிங்கை வெளியிட்டது.
இந்த டிஜிட்டல் தங்கம் செபியால் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும் அவை பத்திரங்களாகவோ அல்லது டெரிவேட்டிவ்களாகவோ வகைப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே, இவை அதன் அதிகார வரம்பிற்கு வெளியே இருப்பதாகச் செபி கூறியது. அதாவது நாளை எதாவது பிரச்சனை என வந்தால் உங்கள் பணம் மொத்தமாகப் போய்விடலாம்.. மேலும், செபியின் முதலீட்டாளர் பாதுகாப்பு கட்டமைப்பின் கீழ் உங்களுக்கு எந்தச் சட்டப் பாதுகாப்பும் இருக்காது என்று சொல்ல வருகிறார்கள்.
சிக்கல் என்ன
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் பங்குச்சந்தை நிறுவனங்கள் செபி கண்காணிப்பில் இயங்கும். வங்கிகள் ஆர்பிஐ கட்டுப்பாட்டில் இயங்கும். ஆனால், டிஜிட்டல் கோல்ட் இந்த இரண்டிற்குக் கீழும் வராது. எனவே, நாளை பிரச்சனை வரலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி செபி கூறுகிறது.
செபி ஏன் இதில் ரிஸ்க் இருக்கிறது என்று சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முதலில் டிஜிட்டல் தங்கம் எப்படி வேலை செய்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு செயலியில் டிஜிட்டல் தங்கத்தை 500 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்றால்.. அதே அளவுக்குத் தங்கத்தைச் சந்தையில் இருந்து அந்த நிறுவனம் வாங்கி வைக்க வேண்டும். அதாவது நீங்கள் டிஜிட்டலாக வாங்கும் தங்கத்தை அந்த நிறுவனம் physicalஆக வாங்க வைக்க வேண்டும் என்பதே இதன் கான்செப்ட்!
செக் செய்ய யாரும் இல்லை
பிரச்சனை என்னவென்றால், நிஜமாகவே அந்த நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வைக்கிறார்களா என்பதைச் சரி பார்க்கச் செபி அல்லது எந்தவொரு நிறுவனத்தாலும் முடியாது. நாளையே சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் திவாலானால் என்ன நடக்கும் என்பதற்கான தெளிவான சட்டக் கட்டமைப்பும் இல்லை. மியூச்சுவல் பண்டுகள் மற்றும் ஷேர் டிரேடர்கள் செபியின் விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டி இருக்கும். ஆனால், டிஜிட்டல் தங்கத் தளங்களுக்குச் செபி விதிகள் பொருந்தாது என்பதே சிக்கல்.
அதனால் தான் செபியின் எச்சரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், செபி டிஜிட்டல் தங்கத்தை வாங்க வேண்டாம் என்றும் சொல்லவில்லை.. அதில் இருக்கும் ஆபத்துக்களை அறியாமல் ஒழுங்குபடுத்தப்படாத தங்கத்தை வாங்க வேண்டாம் என்று மட்டுமே அது கூறுகிறது. டிஜிட்டல் தங்கத்தை விற்கும் பல நிறுவனங்கள் நேர்மையானது என்றாலும் கூட சில நிறுவனங்களில் பிரச்சனை இருக்கிறது என்பதையே செபி சொல்கிறது.
பணம் போய்விடும்
இது தொடர்பாக முதலீட்டு ஆலோசகர் அபிஷேக் குமார் கூறுகையில், "இதன் மூலம் டிஜிட்டல் தங்க செயலிகளின் செபியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதைச் செபி தெளிவுபடுத்துகிறது. ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், முதலீட்டாளர்களுக்கு செபியின் பாதுகாப்பு கிடைக்காது. டிஜிட்டல் தங்க தளங்களுக்கு எந்தவித ஒழுங்குமுறை மேற்பார்வையும் இல்லை. இதனால் முதலீட்டாளர்கள் இந்தத் தளங்களின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவது கடினம். இதனால் மக்கள் தங்கள் பணத்தை இழக்கும் அபாயம் இருக்கவே செய்கிறது" என்றார்.
அப்போது என்ன செய்யலாம்
டிஜிட்டல் தங்கத்திற்குப் பதிலாக கோல்ட் எக்ஸ்சேஞ்ச்-டிரேடட் ஃபண்டுகள் (ETFs) மற்றும் எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிப்ட்களில் (EGRs) முதலீடு செய்யலாம் என்றே செபி கூறுகிறது.. பங்குச்சந்தையில் எப்படி நீங்கள் பங்குகளை வாங்குகிறீர்களோ அதுபோல இதையும் நீங்கள் வாங்கலாம்! இவை நேரடியாகச் செபி கட்டுப்பாட்டில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஷாக்! 22 கேரட் நகையில் இனி ஹால்மார்க் கட்டாயம்! இவர்களுக்கு புது ரூல்ஸ் -
தலைகீழாகப் போகுதே தங்க மார்க்கெட்! இந்த நேரத்துக்கெல்லாம் 2 லட்சம் போயிருக்கனும்! தொடர் சரிவு ஏன்? -
தங்கத்தை வைத்து அதிபதி ஆகலாம்.. 312% ரிட்டர்ன்.. ஆர்பிஐ-யின் அதிரடி அறிவிப்பு.. யூஸ் பண்ணுங்க! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications