அடுத்தடுத்து மரணம்.. 2 நாளில் 38 பேர்.. பஞ்சாப்பில் மது குடித்தவர்கள் மர்மமாக பலி.. போலீஸ் விசாரணை!
பஞ்சாப்பில் மது குடித்தவர்கள் 38 பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சண்டிகர்: பஞ்சாப்பில் மது குடித்தவர்கள் 38 பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக பல்வேறு மாநிலங்களில், நகரங்களில் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் இன்னும் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் மது கிடைக்காத குடிகாரர்கள், கள்ள சாராயம் காய்ச்சுவது, போதைக்காக புதிய போதை வஸ்துக்களை நாடுவது என்று நிறைய சம்பவங்கள் நடக்கிறது. இப்படி கள்ள சாராயம் காரணமாக, ஆங்காங்கே மக்கள் பலியாவதும் தொடர்கதையாகி உள்ளது.

பஞ்சாப் எப்படி
இந்த நிலையில் பஞ்சாப்பில் அடுத்தடுத்து மது குடித்த 38 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் எல்லோரும் கள்ள சாராயம் குடித்து பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 48 மணி நேரத்தில் 38 பேர் இப்படி அடுத்தடுத்து பலியாகி உள்ளனர். மூன்று மாவட்டங்களில் இருக்கும் மக்கள் இப்படி பலியாகி உள்ளனர்.

எங்கே மரணம்
பஞ்சாப்பில் இருக்கும் அமிர்தசரஸ், பட்டாலா, டார்ன் டாரன் ஆகிய மாவட்டங்களில் மரணங்கள் நிகழ்ந்து உள்ளது. இப்போதுவரை அங்கு ஏற்பட்டு இருக்கும் மரணங்கள் உயர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். 20க்கும் அதிகமான நபர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. சிலர் மோசமான உடல் நிலையிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

மரணம் எப்படி
அமிர்தசரஸில் முதல் மரணம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 29ம் தேதி முதல் மரணம் ஏற்பட்டது. அதன்பின் 30ம் தேதி அதிகாலை மேலும் 2 பேர் மரணம் அடைந்தனர். அதன்பின் வரிசையாக அடுத்தடுத்து இரண்டு அல்லது மூன்று பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மொத்தமாக இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர். எல்லோரும் உறுப்புகள் செயல் இழந்து பலியாகி உள்ளனர்.

கள்ள சாராயம் உற்பத்தி
இவர்கள் எல்லோரும் கள்ள சாராயம் குடித்து இருக்கலாம். அருகருகே இருக்கும் மாவட்டங்களில் இதை விற்று இருக்கலாம். இதன் மூலம் இவர்கள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications