சூப்பர்! பகத் சிங் கிராமத்தில் முதல்வராக பதவியேற்கும் பகவந்த் மான்! கட்சியினருக்கு முக்கிய அட்வைஸ்
சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வராக வரும் மார்ச் 16இல் பதிவேயற்க உள்ள ஆம் ஆத்மியின் பகவந்த் மான், தனது கட்சியின் எம்எல்ஏக்களுக்கு முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப். 20இல் நடைபெற்ற சட்டசபை நடைபெற்ற தேர்தல் முடிவுகள் மார்ச்10இல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 117 இடங்கள் உள்ள நிலையில், ஆம் ஆத்மி 92 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
பஞ்சாபில் காங். மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டெல்லிக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

பகத் சிங் மண்
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்குப் பின்னர் டெல்லி சென்ற ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் டெல்லி சென்று ஆம் ஆத்மி அரவிந்த் ஜெர்விவாலை சந்தித்து வாழ்த்து பெற்றார். இன்று (மார்ச் 12) பஞ்சாப் ஆளுநரைச் சந்தித்து பகவந்த் மான் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். வரும் மார்ச் 16ஆம் தேதி, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த கிராமமான கத்ஹர் கலனில் பதவியேற்பு விழா நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

ஆணவம் கூடாது
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், "நாம் எங்குச் சென்று மக்களிடம் வாக்கு கேட்டுமோ, இப்போது அதே பகுதியில் தான் வேலை செய்ய வேண்டும். எம்எல்ஏக்கள் எப்போதும் தலைநகர் சண்டிகரில் முகாமிட்டு இருக்கக் கூடாது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் பணியாற்ற வேண்டும். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், ஆணவம் கொள்ளக் கூடாது. வாக்களித்தவர்கள், வாக்கு அளிக்காதவர்கள் என அனைவருக்கும் நாம் பணியாற்ற வேண்டும்.

அமைச்சர்கள்
நீங்கள் பஞ்சாப் மக்களின் எம்எல்ஏக்கள். அவர்கள் தான் இந்த அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பஞ்சாபில் முதல்வர் தவிர அதிகபட்சம் 17 கேபினட் அமைச்சர்களை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். எனவே, தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என யாரும் கோபப்பட வேண்டாம், என்னைப் பொருத்தவரை நீங்கள் அனைவரும் கேபினட் அமைச்சர்கள் தான். நாம் அனைவருமே பஞ்சாப் வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும்" என்றார்.

முதல்முறை
கடந்த 60 ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கட்சி இத்தனை இடங்களில் வெல்வது இதுவே முதல்முறையாகும். காங். ஆட்சியில் முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களையும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் தோற்கடித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளதன் மூலம் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியில் இருக்கும் ஒரே கட்சியாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மாறியுள்ளது
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications