என்னது வெறும் ஒன்னு, இரண்டா? பஞ்சாப்பில் பாஜகவிற்கு காத்திருக்கும் இடி.. ஏபிபி - சி வோட்டர் சர்வே!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திக்குமென்று ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.
பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் மொத்தம் 117 இடங்களுக்கு நடக்க உள்ளது. வரும் பிப்ரவரி 14ம் தேதி இந்த சட்டசபை தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மார்ச் 10ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த முறை பஞ்சாப் தேர்தலில் பல முனை போட்டி நிலவ போகிறது. அங்கு தற்போது வரை நான்கு முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் முக்கிய போட்டியாளர்களாக கருதப்படுகிறது. இன்னொரு பக்கம் அமிரிந்தர் சிங்கின் லோக் காங்கிரசும் போட்டியிடுகிறது.

என்ன கணிப்பு
இந்த நிலையில் ஏபிபி சி வோட்டர் சர்வேபடி பஞ்சாப்பில் இந்த முறை தொங்கு சட்டசபை உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. அங்கு ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து டெல்லி தலைமையின் முடிவுகளுக்கு எதிராக செயல்படுவதால் அங்கு பஞ்சாப் பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

பஞ்சாப் தோல்வி
இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய அளவில் ஆதரவாக முடியும். அதே சமயம் விவசாயிகள் மத்தியில் ஆதரவு கொண்ட சிரோன்மணி அகாலி தளம் கட்சி இந்த முறை பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆம் ஆத்மி கட்சி 52-58 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது. அங்கு 114 இடங்கள் உள்ளது. மெஜாரிட்டி பெற 114 இடங்களில் வெல்ல வேண்டும்.

மெஜாரிட்டி
இதனால் ஆம் ஆத்மி அதிக இடங்களை வென்றாலும் மெஜாரிட்டி கிடைப்பதில் சிக்கல் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி 37-43 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி தொடர்வது கொஞ்சம் சந்தேகம்தான். அமரீந்தர் சிங் போனது அக்கட்சி பெரிய பின்னடைவாகும் என்று கூறப்படுகிறது. குறைந்த இடங்களை வென்றாலும் சிரோன்மணி அகாலிதளம் கிங் மேக்கராக மாறும் வாய்ப்புகள் உள்ளன. அந்த கட்சிக்கு 17-23 இடங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

பாஜக கூட்டணி
இந்த கட்சி முன்பு பாஜக கூட்டணியில் இருந்து விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பாஜக வெறும் 1, 2 அல்லது அதிகபட்சம் 3 இடங்களை மட்டுமே வெல்லும் என்று ஏபிபி சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. விவசாய சட்டங்கள் ரத்து ஆனாலும் கூட பஞ்சாப் விவசாயிகள் பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

பஞ்சாப் பாஜக
பஞ்சாப்பில் பாஜக கூட்டங்களை கூட நடத்த முடியாத அளவிற்கு அங்கு விவசாயிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் பஞ்சாப்பில் பாஜக அரசியல் கூட்டங்களை நடத்துவது கடுமையாகி உள்ளது. பிரதமர் மோடியே பாதுகாப்பு காரணங்களால் திரும்பி செல்லும் அளவிற்கு அங்கு பாஜக மீது எதிர்ப்பு நிலைப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் பாஜக வெறும் 1-3 இடங்களில் வென்று மோசமான தோல்வியை தழுவும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications