தனிக் கட்சி துவங்குகிறார் கேப்டன் அமரீந்தர் சிங்.. பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டம்
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தனிக் கட்சியை விரைவில் தொடங்க உள்ளதாக அறிவித்தார். மேலும் 2022 மாநிலத் தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமரீந்தர் சிங் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் ட்விட்டர் பதிவுகளில் இதுகுறித்து கூறியிருப்பதாவது.
"பஞ்சாப் எதிர்காலத்துக்கான போர் தொடங்கிவிட்டது. பஞ்சாப் மக்கள் நலனுக்காகவும் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஓராண்டுக்கும் மேல் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்காகவும் செயல்பட எனது புதிய கட்சியைத் தொடங்குவது பற்றி விரைவில் அறிவிப்பேன்.

விவசாயிகள் நலன்
விவசாயிகள் நலனுக்காக அவர்களது போராட்டத்துக்குத் தீர்வு கண்டால் 2022 சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படலாம். பஞ்சாப் மற்றும் பஞ்சாப் மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வரை நான் ஓயமாட்டேன். அரசியல் நிலைத்தன்மையும், உள் மற்றும் வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதும் தான் பஞ்சாபுக்கு இப்போது தேவை. அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்தையும் செய்வேன் என்று, பஞ்சாப் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்." இவ்வாறு அமரிந்தர் சிங் கருத்தை ரவீன் துக்ரல் வெளியிட்டுள்ளார்.

முதல்வர் பதவி
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கை ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, சரன்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சித்துவுடன் மோதல்
காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜிநாமா செய்யும் நிலை உருவாகியிருந்தது. பின்னர் சித்துவும் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அமித் ஷாவுடன் சந்திப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அமரிந்தர் சிங் ஏற்கனவே சந்திப்புகளை நடத்தி இருக்கிறார். அப்போது அமரீந்தர் சிங், தனிக் கட்சி துவங்குவது பற்றியும் பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பஞ்சாப் சட்டசபை தேர்தல்
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் விவசாயிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் எனவே பாஜகவுக்கு செல்வாக்கு குறைந்து விட்டது. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடையே அங்கு போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அமரிந்தர் சிங் தனிக் கட்சி தொடங்கி பாஜக வுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியை பிடிப்பதற்கு வாய்ப்பு இருக்கும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் அது நடக்குமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications