பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் ஆம் ஆத்மியின் பகவந்த் மான் - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
பஞ்சாப் மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் இன்று பதவியேற்றுக்கொண்டார். விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த கிராமத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. பிரதான எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது.

இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த கிராமத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று பகவந்த் மானுடன் 16 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் மஞ்சள் நிற டர்பன் அணிந்தும் பெண்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்தும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications