தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.. ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு ஆபத்து?காங். எடுத்துள்ள அதிரடி முடிவு
சண்டிகர்: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹரியானாவில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஹரியானாவில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும்
பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களைப் பெற தவறியது. இதையடுத்து ஜனநாயக் ஜனதா கட்சி(10) மற்றும் சுயேச்சை எம்எல்ஏகளின்(2) ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
சில மாதங்களாகவே ஹரியானாவில் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாநிலத்திலுள்ள பல ஆயிரம் விவாசியகள் டெல்லியை முற்றுகையிட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுயேச்சை எம்எல்ஏகள் ஆதரவு வாபஸ்
இந்நிலையில், ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர இருப்பதாக ஹரியானா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் முக்கிய தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா அறிவித்துள்ளார். மேலும், பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த இரண்டு சுயேச்சை எம்எல்ஏகள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்
மேலும், "பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர உள்ளோம். இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டனர், கூட்டணிக் கட்சியிலும் சில எம்எல்ஏகள் இந்க அரசு தான் மிகவும் ஊழல் நிறைந்த அரசு என குற்றஞ்சாட்டுகின்றனர். பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரும்போது அவர்கள் நிலைப்பாடு தெரியவரும்" என்றார்.

பேரணி
முன்னதாக, நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வர ஏதுவாக ஆளுநர் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன் பூபேந்தர் சிங் ஹூடா நேற்று பேரணி நடத்தினார். இது குறித்து ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு நம்பிக்கை இல்லை
மேலும், விவசாய சட்டங்களில் மாநில அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டால் பொதுமக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்றும் அவர் தெரிவித்தார். ஹரியானாவில் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் மார்ச் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. அப்போது பாஜக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் காங்கிரஸ் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications