பேனிக் ஆன பஞ்சாப்.. நள்ளிரவில் நிலநடுக்கம்! அப்படியே அதிர்ந்துடுச்சே - என்ன அளவு?
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டாவில் நள்ளிரவு ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் நள்ளிரவு 1.32 மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவில் 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் மிதமான அதிர்வுகள் தென்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பூமிக்கு அடியில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த மிதமான நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்புகளும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

இது குறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "2024 பிப்ரவரி 4 ஆம் தேதி அதிகாலை 1:32:24 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 30.49 அட்சரேகை மற்றும் 72.14 தீர்க்கரேகையில் 80 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மைம் கொண்டிருந்தது. குறிப்பாக பதிண்டாவிற்கு மேற்கே 271 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்துள்ளது." என தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கம் மிதமான அளவில் ஏற்பட்டது என்றாலும், பூமியின் மேற்பகுதியில் ஏற்பட்டு இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். டெக்டோனிக் தட்டு எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் நிலநடுக்கங்கள் அசாதாரணமானவை அல்ல என்றும், இந்த காரணத்தாலேயே பஞ்சாப் போன்ற பகுதிகளில் இதுபோன்ற நில அதிர்வுகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 80 கிமீ ஆழம் நிலநடுக்கம் என்பது பூமியின் மேற்பகுதியிலேயே வருகிறது. ஆழமான பகுதியில் இந்த அதிர்வுகள் ஏற்படாததால் அதிக பகுதிகளில் அதிர்வுகள் உணரப்படவில்லை.
புவியின் மேற்பரப்பில் உணரப்படும் நிலநடுக்கத்தின் பாதிப்பு தன்மை குறைவாக இருப்பதற்கு இதுவே காரணமாகும். நில நடுக்கத்தின் அளவு மிதமான ஒன்றாக தெரிந்தாலும், அங்குள்ள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மிதமானதாக தோன்றும் 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் கூட சில சமயங்களை கடும் அதிர்வுகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் கட்டிடங்கள் இடிவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.
நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில் கட்டிட கட்டமைப்பு நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது அவசியம். என்சிஎஸ் எனப்படும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தொடர்ந்து நிலநடுக்கம் தொடர்பாக கண்காணித்து, அபாயங்களை மதிப்பிட்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அத்தியாவசியமான தகவல்களை வழங்கி வருகிறது. இதுபோன்ற நிலநடுக்க பாதிப்புகளுக்கு பிறகு, அங்கு குடியிருப்பவர்கள் அதிகாரப்பூர்வ சமூக தளங்கள், ஊடகங்கள் மூலம் தகவலை பெற்று றும் எந்தவொரு நிலநடுக்கங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் படி தயாராக இருக்க வேண்டும்.
-
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல












Click it and Unblock the Notifications